games

img

வீரர்களை அடைகாத்து முதல் உலகக்கோப்பையை வென்ற உருகுவே

விளையாட்டு உலகில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்தாலும், 1930-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை (உருகுவேயில் நடைபெற்றது - உருகுவே சாம்பியன்) கால்பந்து தொடரில் நடைபெற்ற ஒரு வித்தியாசமான சம்பவம் கால்பந்து உலகில் இதுவரை மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. அது யாதெனில் போட்டியில் கலந்துகொள்வதற்கு உருகுவே உள்ளிட்ட சில அணிகள் படகு மூலம் ஒரே படகில் வந்தார்கள். அந்த பயணத்தில் உருகுவே அணியின் கோல்கீப்பர் யாரிடமும் தகவல் சொல்லாமல் வீட்டிற்குப் போய்விட்டார் (?). கடத்தப்பட்டாரா? இல்லை பணம் வாங்கிக்கொண்டு சென்றாரா? என முழுமையான காரணம் ஒன்றும் தெரியவில்லை. கோல் கீப்பர் மாயமான தினத்தில் இருந்து உலகக்கோப்பை நடைபெற்ற 2 மாதகாலமாக உருகுவே அணியினர் மோண்டிவிடோவில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் வெளியுலகம் அனுமதி இல்லாமல் தங்கவைக்கப்பட்டனர். இந்த காட்சி தான் நவீன சினிமா உலகில் ஒரு கருப்பொருளாக (வீரர்கள் கடத்தல், காயம் ஏற்படுத்துதல், பணத்திற்காக சூதாட்டம்) உள்ளது. மேலும் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் உருகுவேயின் வெற்றி கோலை அடித்த ஹெக்டர் காஸ்ட்ரோவிற்கு ஒரு கை இல்லை. சிறுவயதில் ஏற்பட்ட விபத்தில் அவர் ஒரு கையை இழந்திருந்தார். உலகக்கோப்பைக் கால்பந்து போட்டிகளின் முதல் சாம்பியன் ஆனதைக் கொண்டாடும் வகையில் உருகுவேயில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் உருகுவே அணியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் நிலம் மற்றும் வீடு வழங்கப்பட்டது. 

ஆப்பிரிக்க வரலாறு கேமரூன்

8-வது முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ள கேமரூன் அதிகமுறை உலகக்கோப்பை போட்டிகளுக்குத் தகுதிபெற்ற ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையைப் பெறுகிறது. இதற்கு முன்பாக 1982, 90, 94, 98, 2002, 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் கேமரூன் உலகக்கோப்பை போட்டி களுக்கு தகுதி பெற்றிருந்தது. மேலும் உலகக் கோப்பை போட்டி களில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையையும் அந்த கேமரூனே கைவசம் வைத்துள்ளது. கேமரூன் 1990ல் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.