games

img

விளையாட்டு...

மெஸ்ஸிக்கு எதிராக ஆபாச செயல் விளையாட்டு உலகில் மோதலை தூண்டி விடும் “ஸ்பீட்”

உலகில் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். சினிமா, சமை யல், சாகசம், விளையாட்டு, கல்வி, சமூக சேவை என பல்வேறு துறை களில் யூடியூப் சேனலில் பலர் நன்றாக  கல்லா கட்டி வருகின்றனர். அந்த வகை யில் விளையாட்டு - சாகசம் பிரிவில்  பிரபலமாக இருப்பவர் டாரன் ஜேசன்  வாட்கின்ஸ் ஜூனியர் என்ற அமெரிக்கா வைச் சேர்ந்தவர், மிக இளம் வயதி லேயே உலகின் முன்னணி  யூடியூப்பர் களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.  இவருக்கு “ஸ்பீட் (Speed)” என்ற  அடைமொழியும் உள்ளது. தனது யூடியூப் சேனல் (IShowSpeed - youtube channel name) மூலம் ஆண்டுதோறும் கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் ஸ்பீட் கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், மல்யுத்தம் என  உலகில் எங்கு விளையாட்டுப் போட்டி கள் நடந்தாலும் அங்கு முதல் ஆளாக  சென்று விடுவார். சமீபத்தில் இந்தியா வில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு கூட ஸ்பீட் வருகை தந்தார். ஸ்பீட் கால்பந்து உலகின் முன்னணி  வீரரான ரொனால்டோவின் தீவிர ரசி கர் ஆவார். ஆனால் மற்றொரு  முன்னணி வீரரான மெஸ்ஸிக்கு எதிராக பல்வேறு இழிவான செயல்களில் ஈடு பட்டு வருகிறார். சமீபத்தில் ஸ்பீட், மெஸ்ஸியின் மெழுகு சிலையை வைத்து ஆபாசமான செயலிலும் ஈடுபட்டுள்ளார். அதே போல தான் செல்லும் இடங்களில் மெஸ்ஸி ரசி கர்கள் இருந்தால் அவர்களிடம் வம்பு  சண்டைக்கும் செல்கிறார். இதனால் மெஸ்ஸி ரசிகர்களுக்கும், ஸ்பீடுக்கும் இடையே பல்வேறு தெருச் சண்டைகள் (street fight) நிகழ்ந்துள்ளன. மேலும் விளையாட்டு உலகில் தனது இழிவான செயல்கள் மூலம் மோதலை தூண்டி வருகிறார்.  ஆனால் ஸ்பீடின் வம்புச் சண்டைகள்  அனைத்தும் ஒரே ஒரு சொற்றொடரில் முடிந்துவிடுகிறது. அது என்னவென்றால்  ஸ்பீட் 19 வயது கத்துக்குட்டி என்பது  தான். அதனால் அவர் செய்யும்  சேட்டைகளை யாரும் கண்டுகொள்வ தில்லை. ஆனால் மெஸ்ஸி ரசிகர்களை  தொடர்ந்து சீண்டி வருவதை குறைப் பது நல்லது. இல்லையென்றால் பிரச்சனை பெரிதாக முளைக்கும் சூழல் கூட உருவாகலாம். காரணம் கால்பந்து  உலகில் மெஸ்ஸிக்கு அதிகளவில் ரசி கர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

“விசுவாசம்”  -  கொல்கத்தா அணிக்கு பாடம் எடுத்த நிதிஷ் ராணா மனைவி

2025 ஐபிஎல் ஏலத்தில் கொல் கத்தா அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்டருமான  நிதிஷ் ராணாவை  ராஜஸ்தான் அணி ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.  2015 முதல் ஐபிஎல் தொடரில் விளை யாடி வரும் நிதிஷ் ராணா 2 ஆண்டுகள் (2015-2017) மும்பை அணிக்காக விளையாடினார். அதன்பிறகு 2018 முதல் 2023 வரை 5 ஆண்டுகள் கொல்கத்தா அணிக்காக விளையாடிய நிதிஷ் ராணா, சில போட்டிகளில் கேப்ட னாகவும் செயல்பட்டார். குறிப்பாக சீனியர்  வீரர்கள் இல்லாத பொழுது கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளர் போல பக்க பலமாக இருந்தார். இந்நிலையில், கொல்கத்தா அணிக் காக பல்வேறு கட்டங்களில் விசுவாசத்து டன் இருந்தாலும், அந்த அணியால் தக்க வைக்கப்படாதது கடும் சர்ச்சையை ஏற்ப டுத்தியுள்ளது. டம்மி வீரர்களை கூட ரூ.5 கோடி கொடுத்து வாங்கிய கொல்கத்தா அணி, நிதிஷ் ராணாவை ரூ. 4 கோடி கொடுத்து வாங்க விரும்பாததற்கு கொல் கத்தா ரசிகர்கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர்.  விசுவாசத்துக்கு மதிப்பில்லை ராஜஸ்தான் அணி தன்னை ஏலம் எடுத்ததற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத் தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வண்ணமான பிங்க் ஜெர்சியை அணிந்து “ராயல்டி இஸ் பிங்க் (Royal-ty is Pink)” என பதிவிட்டு இருந்தார். “கொல்கத்தா அணியிடம் தனது விசுவாசத்துக்கு மதிப் பில்லை” என்பதை வெளிப்படுத்தவே “ராயல்டி (Royal-ty)” என்ற வார்த்தையை நிதிஷ் ராணா பயன்படுத்தியுள்ளதாக கொல்கத்தா ரசிகர்கள் மீம்ஸ்களுடன் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் நிதிஷ் ராணாவின் மனைவி சாச்சி மார்வா தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில்,”விசுவாசம் அதிக மதிப்புடையது ; அதை எல்லோராலும் வாங்க  முடியாது” என்று பதிவிட்டு கொல்கத்தா அணியை மறைமுகமாக சாடியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் நிதிஷ் ராணா மற்றும் அவரது மனைவி சாச்சி மார்வா  ஆகிய இருவரும் கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் அணியை சமூக வலைதளங்க ளில் பின்தொடர்வதை நிறுத்தி விட்டனர்.