games

img

பிளே ஆப்பில் இடமில்லை பஞ்சாப் வீரர் தவானுக்கு அடி, உதை கொடுத்த தந்தை

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க அதிரடி வீரர் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். பார்ம் பிரச்சனை காரணமாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி-20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் சொந்த ஊருக்கு சென்ற தவானுக்கு அடி, உதை கொடுத்துள்ளார் அவரது தந்தை. இதனை தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் “நாக் அவுட்களுக்கு தகுதி பெறாததால் என் அப்பாவால் நாக் அவுட் செய்யப்பட்டேன்” என்று சிரிப்பலையுடன் ரீல் வீடியோவாக பதிவேற்றி உள்ளார்.

;