games

img

ஐபிஎல் 2022 – டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை கைப்பற்றிய டாடா குழுமம்  

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா குழுமம் கைப்பற்றியுள்ளது.  

ஆண்டுதோறும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதனைதொடர்ந்து ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஷர் உரிமத்தை சீனாவின் விவோ நிறுவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின்  புதிய டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனமான டாடா குழுமம் கைப்பற்றியுள்ளது.  இதனை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார். 

;