games

img

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி-20 தொடர்...  இங்கிலாந்து அணி கைப்பற்றியது...  

பார்ல் 
தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க சென்றுள்ள நிலையில், தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது.  

3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2-வது ஆட்டம் பார்ல் நகரில் உள்ள போலந்து மைதானத்தில் இன்று (ஞாயிறு) நடைபெற்றது.  

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே திணறியது. 100 ரன்கள் எடுப்பதற்குள் தென் ஆப்பிரிக்கா மிடில் ஆர்டரை இழந்தது. மிடில் ஆர்டரில் கேப்டன் டி காக் (30) மட்டுமே சிறப்பாக விளையாடினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற பின் வரிசையில் டுசென் (25), லிண்டே (29) ஓரளவு கைகொடுத்து அணியின் ஸ்கோரை ஓரளவு தூக்கி பிடித்தனர். தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரசித் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தாவித் மலனின் (55) அதிரடியால் 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து வெற்றியுடன் 2-0 கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி டி-20 கேப் டவுனில் நாளை மறுநாள் (டிசம்பர் 1) நடைபெறுகிறது.  

;