கிரிக்கெட் உலகின் மனங்களை ஆனந்தக் கண்ணீரில் நனைய வைத்த சர்பிராஸ் கான்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அணி அதிரடி வீரரான சர்பிராஸ் கான் (26) ரஞ்சி, ஐபிஎல் போன்ற தொடர்களில் நன்றாக விளையாடினாலும், பிசிசிஐ உடனான மோதலால் 8 வருடத்திற்கு மேல் (தோராயமாக) இந்திய தேசிய அணி யில் இடம் கிடைக்காமல் உள்ளூர் தொடர்களிலேயே விளை யாடி வந்தார்.
இதற்கு கடும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில், நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு மூத்த வீரர்கள் ஓய்வால் இங்கி லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சர்பிராஸ் கான் தேர்வு செய்யப்பட்டார். முதலிரண்டு போட்டிகளில் பெஞ்சில் இருந்த சர்பிராஸ் கான் 3-ஆவது டெஸ்ட் போட்டியில் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேவிடம் ஆசி பெற்று (311- ஆவது வீரராக - கேப் நிகழ்வு) இந்திய தேசிய அணியில் காலடி வைத்தார்.
ஆனந்த கண்ணீர்
பொதுவாக கிரிக்கெட் உலகில் உலகக்கோப்பை வென்றாலோ, வீரர்கள் சதமடித்தாலோ ரசிகர்கள் ஆனந்த கண்ணீரில் நனைவார்கள். ஆனால் வீரர் ஒருவர் அணியில் காலடி வைத்த நிகழ்வின் 4 சம்பவங்களால் இந்திய கிரிக்கெட் உலகம் ஆனந்த கண்ணீரில் நனைந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 சம்பவங்கள் :
1. சர்பிராஸ் கான் நன்றாக விளையாடினாலும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அணியில் இடம்பிடித்தது இந்திய அணிக்கான தொப்பியை அணிந்தது.
2. தான் அணியில் இடம்பிடித்து கேப் வாங்கும் நிகழ்வை பார்ப்பதற்காக வந்த தந்தை, தாயை கண்டதும் வேக மாக ஓடிப்போய் கட்டியணைத்தது மட்டுமல்லாமல், இது தான் உங்களின் கனவு என்று கூறி, இந்திய அணியின் தொப்பியை தாய், தந்தை கைகளால் தொட்டு காண் பித்த நிகழ்வு.
3. தனது மகன் இந்திய அணியினருடன் இருப்பதை கண்டு மைதானத்திலேயே ஆனந்தத்தில் கதறி அழுத சர்பிராஸின் தாய் - தந்தையின் செயல்பாடு.
4.சர்பிராஸ் கானிற்கு இந்திய வீரர்களின் தனிப்பட்ட ஆதரவு. அவர் ஆட்டமிழந்த பொழுது சதத்தை கோட்டை விட்டாரே என்று கேப்டன் ரோகித் மற்றும் மற்ற வீரர்கள் அதிர்ச்சி அடைந்த நிகழ்வு.
ஆகிய 4 சம்பவங்களும் கிரிக்கெட் உலகை கண்ணீரில் நனைய வைத்துள்ளது.
தனது கன்னி சர்வதேச ஆட்டத்தில் சர்பிராஸ் கான் அதிரடி யாக விளையாடி 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் தவறால் ரன் அவுட்டானார். இல்லையென் றால் சதமடித்து தனது பெற்றோரையும், ரசிகர்களையும் கூடுதல் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருப்பார்.
டாப் டிரெண்டிங்கில் சர்பிராஸ் கானின் தந்தை
சர்பிராஸ் கானின் முதல் ஆட்டத்தை காண அவரது தந்தை நவுஷத் கான், “கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு அல்ல. அனைவருக்குமானது” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து வந்து இருந்தார். இவரது செயல்பாடு சமூகவலைத்தளங்களில் டாப் டிரெண்டிங்கில் வைரலாக பரவி வருகிறது.
ராஜ்கோட் டெஸ்ட்
இந்தியா 445 ; இங்கிலாந்து நிதான ஆட்டம்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வியாழனன்று தொடங்கிய 3-ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ரோகித் சர்மா (131), ஜடேஜா (112), சர்பிராஸ் கான் (62) ஆகியோரின் அபார ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து வெள்ளியன்று 2-ஆம் நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நிதான வேகத்தில் ரன் குவித்தது. 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. டக்கெட் (133), ரூட்(9) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
சனியன்று தொடர்ந்து 3-ஆம் நாள் ஆட்டம் நடைபெறு கிறது.