games

img

காயம் காரணமாகத் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் ரோஹித் சர்மா 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக ரோஹித் சர்மா விலகியுள்ளதாகவும், அவருக்குப் பதில் பிரியங்க் பஞ்சால் மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

தென்னாப்பிரிக்கா - இந்தியா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான மும்பையில் 3 நாட்கள் இந்திய அணி வீரர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனி விமானம் மூலம் 16 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா புறப்படுகின்றனர்.

இந்நிலையில் துணை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாகத் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாகவும், மும்பையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டபோது காயம் ஏற்பட்டதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், இவருக்குப் பதிலாக பிரியங்க் பஞ்சால் மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்தத் டெஸ்ட் தொடரிலிருந்து தான் ரோஹித் சர்மா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், துணை கேப்டன் குறித்த தகவல் எதுவும் பிசிசிஐ அறிவிப்பில் இடம்பெறவில்லை.

;