திறக்கப்பட்டது ஒலிம்பிக் கிராமம்
33ஆவது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் ஜூலை 26 அன்று தொடங்கு கிறது. 206 நாடுகளில் இருந்து 10,672 வீரர்கள் பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இந்த விளை யாட்டுத்தொடருக்கான ஒலிம்பிக் கிராமம் (தங்குமிடம்) வியாழனன்று (இந்திய நேரம் - வெள்ளி) திறக்கப் பட்டது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) தலைவர் தாமஸ் பாக், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு களுக்கான பாரீஸ் 2024 ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் டோனி எஸ்டாங்கு வெட் ஆகியோர் முன்னிலையில் ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்டது. இந்த ஒலிம்பிக் கிராமம் வடக்கு பாரீஸில் சுமார் 54 ஹெக்டேர் பரப் பளவில் அமைந்துள்ளது. 10,000 விளை யாட்டு வீரர்கள் உட்பட கிட்டத்தட்ட 14,500 பேர் ஒரே நேரத்தில் தங்கும் வசதியை கொண்ட இந்த ஒலிம்பிக் கிராமத்திற்கு முதல் நாளே ஆஸ்திரே லியா, பிரேசில், அர்ஜெண்டினா மற்றும் கென்யா நாடுகளின் பிரதிநிதிகள் வந்துள்ளனர்.
இந்திய அணியில் ஹர்ஷித் ராணா
கம்பீரின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான கவுதம் கம்பீர் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலை மை பயிற்சியாளராக சமீபத்தில் நிய மிக்கப்பட்டார். மோடி அரசின் ஆதரவு டன் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது நாடறிந்த விஷயம் என்ற நிலையில், அவரது பயிற்சியில் முதல்முறையாக இந்திய அணி இலங்கை அணிக்கெதி ரான தொடரில் விளையாடவுள்ளது. இலங்கை தொடருக்கான இந்திய அணி தேர்வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது தனக்கு பிடித்த மற்றும் தான் ஆலோசகராக பணியாற்றிய கொல்கத்தா அணியில் விளையாடிய வீரர்களை இந்திய அணிக்குள் கொண்டுவர கம்பர் தீவி ரம் காட்டி வருகிறார். இதன் முதல்படி யாக கொல்கத்தா அணியில் விளை யாடிய ஹர்ஷித் ராணாவை இலங்கை அணிக்கெதிரான டி-20 தொடரில் சேர்த்து, சூப்பர் பார்மில் உள்ள முகேஷ் குமார், ஆவேஷ் கான், துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை நீக்கியுள்ளது பிசிசிஐ. ரசிகர்கள் கண்டனம் முகேஷ் குமார், ஆவேஷ் கான் ஆகி யோர் சர்வதேச அனுபவம் கொண்ட வர்கள். குறிப்பாக சூப்பர் பார்மில் உள்ளார்கள். ஆனால் தனது சுய நலத்திற்காக கம்பீர் சர்வதேச அனு பவம் இல்லாத ஹர்ஷித் ராணாவை அணிக்குள் கொண்டு வந்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கம்பீரின் சொந்த மாநிலமான தில்லி யைச் சேர்ந்த ஹர்சித் ராணா, கொல்கத்தா அணியில் தனது பயிற்சி யின் கீழ் விளையாடியதன் காரண மாகவே இந்திய அணிக்குள் அவரை கொண்டு வந்துள்ளார் கம்பீர். ஹர்சித் ராணா இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதில் எந்த பிரச்ச னையும் இல்லை. ஆனால் சுயநலத்திற் காக மற்ற வீரர்கள் அவமரியாதை செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய மகளிர் கோப்பை - 2024
மலேசியா - தாய்லாந்து
நேரம் : மதியம் 2 மணி
இன்றைய ஆட்டங்கள்
இலங்கை - வங்கதேசம்
நேரம் : இரவு 7 மணி