games

img

பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 91-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் செவ்வாயன்று நடை பெற்றது. கடந்த 3 ஆண்டுகளாக பிசிசிஐ  தலைவர் பொறுப்பில் திறம்பட செயல்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப் படாது என கூட்டத்திலேயே வெளிப்படையாக தெரிவிக்கப்பட்ட நிலையில், “நான் மீண்டும் பெங்கால் மாநில கிரிக்கெட் சங்க தலைவர்  பதவிக்கு திரும்ப இருப்பதாக அதிரடியாக அறி வித்து விட்டார்”, கங்குலி. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும்,  கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகியுமான ரோஜர் பின்னி (67) புதிய தலைவராக அதி காரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.