15-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இளம் வீரர் மயாங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசனில் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் புதிய அணியான லக்னோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த மயாங்க் அகர்வால் டெஸ்ட், ஒருநாள், டி-20 என ஒவ்வொரு போட்டி முறைகளுக்கும் தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பாக விளையாடக்கூடியவர். கடைசி 3 சீசன்களில் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியல் மற்றும் ஐபிஎல் பட்டியலில் டாப் ஆர்டரில் உள்ளார்.