games

img

நியூசிலாந்துக்கு மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி  

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 4 ஆட்டங்களில் இந்தியா தோல்வி அடைந்தது.    

இந்தியா - நியூசிலாந்து மோதிய 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று காலை குயின்ஸ்டவுனில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி சிறப்பாக பந்து வீசியதால் நியூசிலாந்து அணியால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. அமெலிகெர் 66 ரன்னும், சோபியா, தேவினே 34 ரன்னும், லூரன் டவுன், ஜென்சென் தலா 30 ரன்னும் எடுத்தனர்.

இந்திய தரப்பில் தீப்தி சர்மா, கெய்க்வாட், ராணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஸ்மிருதி மந்தனா 71 ரன்னிலும், ஹர்மன் ப்ரீத் கவுர் 63 ரன்கள், கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.    

கடைசியாக இலக்கை நோக்கிச் சென்ற இந்திய அணி, 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.  இதன்மூலம் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒருநாள் டி20 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

;