தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஞாயிறன்று தென் ஆப்பிரிக்காவின் முக்கிய நகரான செஞ்சுரி யன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுலின் (122*) அபார சதத்தின் உதவியால் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. திங்களன்று தொடர்ந்து 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்கவிருந்த நிலையில், வீரர்கள் களத்தில் இறங்க முடியாத அளவிற்கு கன மழை பொழிந்தது. மதிய உணவு இடை வேளை வரை ஒரு ஓவர்கள் வீசவில்லை.