games

img

போராட்ட பதற்றத்துக்கு இடையே கிரிக்கெட் போட்டியை நடத்திய இலங்கை கிரிக்கெட் வாரியம்

கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கி யுள்ள இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜ பட்ச விலகியதை அடுத்து, இலங்கை ஜனாதி பதி கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி கடந்த சில மாதங்களாகவே எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், “வீட்டுக்கொரு போராட்டக் காரர்” என்ற கோரிக்கையுடன் சனியன்று காலை ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் முற்று கையிட்டு நுழைந்தனர். காவலர்கள் திணறி யதை உணர்ந்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மாளிகையில் இருந்து தப்பி, கப்பலில் நாட்டை விட்டு  சென்றதாக வீடியோ ஆதாரம் வெளியாகி யுள்ளது.இலங்கை நாட்டில் இத்தகைய பதற்றம் நிறைந்த  அவசர நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையி லும், காலே பகுதியில் இலங்கை - ஆஸ்தி ரேலிய அணிகள் விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படாமல் தொடர்ந்து நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 364 ரன்கள் குவித்த நிலையில், இலங்கை அணி 2-வது நாளின் 3-வது சீசனில் 45 ஓவர்க ளில் 1 விக்கெட்டை இழந்து 121 ரன்கள் எடுத் துள்ளது. கொழும்பு - காலே பகுதியின் 124 கிமீ  ஆகும். இதனால் போராட்டம் நடைபெறும் இடத்திற்கும் கிரிக்கெட் விளையாட்டு நடை பெறும் இடத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.