பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ள ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், ஒரே ஒரு டி-20 என மூன்றுவிதமான தொடரில் பங்கேற்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்டன் அகரின் மனைவிக்கு இன்ஸ்டகிராம் வழியே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. “உங்களுடைய கணவர் பாகிஸ்தானுக்குச் சென்றால் அவர் உயிருடன் திரும்ப மாட்டார்” என மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டலைக் கண்ட அகரின் மனைவி மெடிலீன் உடன டியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் அளித்தார். விசாரணையில் மிரட்டல் விடுத்த நபரின் இன்ஸ்டகிராம் கணக்கு போலி யானது, மிரட்டலால் ஆபத்து எதுவும் இல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பதில் அளித்துள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி-20 என்ற மூன்றுவிதமான போட்டிகளிலும் ஆஷ்டன் அகர் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்க உள்ளார்
கலக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
2009-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்ப வத்திற்கு பின்பு பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட உலக நாடுகள் தயங்கி வந்தது. கொரோனா பரவலுக்கு பிறகு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. திடீ ரென பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரண மாகக் கூறி எந்த ஆட்டத்திலும் விளை யாடாமல் நாட்டுக்குத் திரும்பியது. அடுத்து இங்கிலாந்து நாடும் அதே புகாரை தெரி வித்து சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமும் நழு வக்கூடாது என்பதை கவனமாக கையாண்டு வரும் பாகிஸ்தான் அரசு பாதுகாப்பில் பலத்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. ஆனால் ஆஷ்டன் அகரின் விவ காரத்தில் கொலை மிரட்டல் வந்துள்ள செய்தி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை பாதிக்குமா என்ற அச்சம் நிறைந்த கலக்கத்தில் பாகிஸ் தான் கிரிக்கெட் வாரியம் ஆழ்ந்துள்ளது.