பாரம்பரியமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரே லியாவில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளையே கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே (கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நடை பெறும் ஆட்டம்) என்ற பெயரில் மெல்போர்னில் ஞாயிறன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 65.1 ஓவர்களில் 185 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் நன்றாக விளை யாடினாலும், இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆண்டர்சனின் (4 விக்.,) மிரட்டலான வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறியது.
தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் (76) மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ரன் விகிதத்தை உயர்த்திய நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 82 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி வழக்கம் போல ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சில் திணறியது.2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட இங்கிலாந்து அணி 51 ரன்கள் பின்தங்கி மிடில் ஆர்டர்களை இழந்து மேற்கொண்டு 6 விக்கெட்டுகளை மட்டும் கைவசம் வைத்துள்ளது. இன்னும் 3 நாட்கள் பாக்கி இருப்பதால் ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் பணியாளர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய குடும்பத்தினர் 2 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இரு அணி வீரர் களுக்கும் 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்கு வதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களுக்கு விரைவில் பிசிஆர் பரிசோ தனை செய்யப்படும் என அந்நாட்டு கிரிக் கெட் வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.