பிரிஸ்பேன் டெஸ்ட்
ஆஸி., 28-0 (13.2) முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா அணி கள் மோதி வரும் பார்டர் - கவாஸ் கர் டெஸ்ட் தொடரின் முதல் 2 ஆட் டங்களின் முடிவில் (பெர்த் - இந்தியா, அடிலெய்டு - ஆஸ்திரேலியா) ஆளுக் கொரு வெற்றியுடன் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன.
இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது.
ஆஸ்திரேலிய அணியில் போலந்தி ற்கு ஓய்வு அளிக்கப்பட்டு, காயத்தில் குண மடைந்த ஹாசில்வுட் மீண்டும் சேர்க்கப் பட்டார். அதே போல இந்திய அணியில் ஜடேஜா, ஆகாஷ் தீப்பிறகு வாய்ப்பு அளிக் கப்பட்டு, அஸ்வின், ஹர்ஷித் ராணா பெஞ்சில் அமர வைக்கப்பட்டனர்.
2ஆவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியாவின் வேகக் கூட்டணி (பும்ரா, சிராஜ், ஆகாஷ்) ஆஸ்தி ரேலிய தொடக்க ஜோடி மீது கடும் தாக்கு தல் தொடுத்தது. ஆனால் ஆஸ்திரேலி யாவின் மிக்ஸ்வீனி - காவஜா ஜோடி (தொடக்க ஜோடி) இந்தியாவின் தாக்கு தலை எளிதாக சமாளித்தது.
மிரட்டிய மழை
13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் எடுத்து இருந்த பொழுது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. தொடக்கத்தில் லேசாக கொட்டிய மழை, அடுத்த சில நிமிடங்க ளில் பலத்த மழையாக பந்தாடியது. இத னால் பிரிஸ்பேன் நகரின் காபா மைதா னம் குளம் போல மாறியது. கனமழை தொடர்ந்து நீடித்ததால் முதல் ஆட்டத்தை கைவிடுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து இருந்தது. மிக்ஸ்வீனி (4) - காவஜா (19) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
தொடர்ந்து இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்குகிறது.
மோப்ப நாய்க்கு இணையான தந்திரம்
மெஸ்ஸியை பம்பரமாக சுழன்று காப்பாற்றும் மெய்க்காப்பாளர் யாசின்
பொதுவாக கால்பந்து உலகில் பெரிய ளவில் சம்பாதிக் கும் நட்சத்திர வீரர்கள் தங்களுக்கு உத வியாளர் ஒருவரை வைத்து இருப்பார் கள். போட்டி இல்லாத நேரங்களில் அல் லது போட்டி முடிந்த பின்பே உதவியா ளர்கள் வீரர்களுடன் இருப்பார்கள். மற்ற நேரங்களில் உதவியாளர்கள் ரசிகர்கள் போல இருப்பார்கள்.
ஆனால் மெஸ்ஸி தன்னுடைய பாது காப்பிற்காக நியமித்துள்ள மெய்க்காப் பாளர் ஒருவர் அவருடனே இருக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும் அர்ஜெண்டினா தேசிய அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி தற்போது அமெரிக்க கிளப் அணியான இன்டெர் மியாமி அணிக்காக விளை யாடி வருகிறார்.
மெஸ்ஸி ஈராக் மற்றும் ஆப்கானிஸ் தானில் பணியாற்றிய முன்னாள் அமெ ரிக்க கடற்படை வீரரான யாசின் சூகோ வை தன்னுடைய மெய்க்காப்பாளராக நியமித்துள்ளார். மைதானத்தில் மெஸ்ஸி விளையாடும் பொழுது, ஆர் வக் கோளாறில் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க மெஸ்ஸியை நோக்கி ஓடி வந்தாலே யாசின் அவர்களை முட்டி தூக்கி எரிந்து விடுகிறார். ரசிகர்கள் எந்த பக்கம் ஓடி வந்தாலும் அவர்களை எளிதாக கண்காணித்து மெஸ்ஸியை நெருங்க விடாமல் தடுத்து விடுகிறார். அதே போல அனுமதியுடன் புகைப் படம் எடுக்கும் ரசிகர்கள் மெஸ்ஸியை லேசாக தொடக் கூட முடியாது. மெஸ்ஸி யை தொட்டால் யாசின் சூகோ தட்டி விடு வார். மீறி தொட முயன்றால் தாக்குதல் நடத்தி விடுவார். மெஸ்ஸியிடம் ஆண்டு க்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கும் யாசின் அனைத்து நேரங்களிலும் அவருடனே இருக்கிறார்.
மைதானத்தில் கிட்டத்தட்ட ராணுவத்தின் மோப்ப நாய் போல மெஸ்ஸியைபம்பரமாக சுழன்று பாதுகாத்து வருகிறார் யாசின் சூகோ. ராணுவத்தில் பணிபுரியும் மோப்ப நாய் தன்னுடைய அதிகாரியை தொட மட்டுமல்லாமல் நெருங்கவேவிடாது என்பது குறிப்பிடத்தக்கது.