ஆசியக்கோப்பை கிரிக்கெட் 2023
இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் மோதல்
16-வது சீசன் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான், இலங்கை நாட்டில் கூட்டாக நடைபெற்று வரு கிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் 3-வது “சூப்பர் 4” சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ் தான் அணிகள் மோதுகின்றன. லீக் ஆட்டங்களில் இரு அணிகள் மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலை யில், “சூப்பர் 4” சுற்றில் வெற்றியை ருசிக்க இரு அணிகளும் தீவிர பயிற்சியுடன் கள மிறங்குகிறது.
இந்தியா - பாகிஸ்தான்
நேரம் : மதியம் 3:00 மணி
இடம் : பிரமதேச மைதானம், கொழும்பு, இலங்கை
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி - ஸ்மார்ட்போனில் மட்டும் இலவசம்)
வழிவிடுமா மழை?
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடை பெறும் இலங்கை நாட்டின் கொழும்பு நகரில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வு தெரி வித்துள்ளது. கிட்டத்தட்ட 95% மழைக்கு வாய்ப்புள்ளதால், ஞாயிறன்று நடைபெறும் ஆசியக்கோப்பை போட்டியில் மழை விளையாடும் சூழல் உள்ளது. ஏற்கெ னவே இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்ட மும் மழையால் ரத்தான நிலையில், “சூப்பர் 4” ஆட்டத்தையும் காண மழை தயாராக இருப்பதால் ஆசிய கண்ட கிரிக் கெட் ரசிகர்கள், கிரிக்கெட் விளையாட்டை வெறுக்கும் அளவிற்கு கடுப்பில் உள்ளனர்.
எல்லாம் இந்தியாவால் வந்த வினை
நடப்பு சீசன் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் அட்டவணை தயாரிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு பிரச்சனையை காரணம் காட்டி ஒன்றிய பாஜக அரசாங்கம் இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் அனுப்ப மறுப்பு தெரிவித்தது. இதனால் மாற்று ஏற்பாடாக இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள் இலங்கை நாட்டிலும், மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறும் படி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தா னில் 20% ஆட்டங்களும், இலங்கையில் 80% ஆட்டங்களும் நடைபெறுகிறது. பருவமழை புரட்டியெ டுத்து வரும் இலங்கையில் அதிக ஆட்டங்கள் இருக்கும் சூழ்நிலையில், லீக் ஆட்டங்களிலேயே சில ஆட்டங்கள் மழையில் சிக்கி பாதிக்கப்பட்டும், சில ஆட்டங்கள் ரத்தாகியுள்ளது. முக்கியமாக கிரிக்கெட் உலகமே ஆவலுடன் இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் “சூப்பர் 4” சுற்று ஆட்டமும், இனி வரும் “சூப்பர் 4” சுற்றின் மற்ற ஆட்டங்களும், இறுதி ஆட்டங்களும் மழையால் பாதிக்கப்படும் படி வானிலை முன்ன றிவிப்புகள் உள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆசியக்கோப்பையில் வீரர்களுக்கு பதில் மழை விளையாடி சுவாரஸ்யத்தை இழந்து வருகிறது. இதற்கு மழை ஒரு காரணம் என்றாலும், மற்றொரு காரணம் இந்திய அணிதான். மழை சீசன் இல்லாத பாகிஸ்தானுக்கு இந்திய அணி சென்றிருந்தால் இந்நேரம் ஆசியக்கோப்பை கிரிக்கெட் அசத்தலான சுவாரஸ்யத்துடன் நகர்ந்திருக்கும். இந்த 2 காரணங்களால் நடப்பு சீசன் ஆசியக்கோப்பை கானல் நீர் போன்று காணாதசுவாரஸ்யத்துடன் நகர்ந்து வருகிறது.
தெரிந்துகொள்வோம்...
டென்னிஸ் உலகில் 4 நாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் சற்று மாறுபட்ட மனநிலை கொண்டவர்கள். பொதுவாக டென்னிஸ் உலகில் வீரர்களின் பெயர்கள் சொன்னால் மட்டுமே சற்று தயக்கம், பயம் கொள்ளும் மரபு உள்ளது. ஆனால் 4 நாடுகளின் பெயர்களை சொன்னாலும் வீரர் - வீராங்கனைகள் சற்று தயக்கத்துடன்தான் விளையாடுவார்கள். அந்த 4 நாடு களின் பெயர் ரஷ்யா, பெலாரஸ், ஸ்பெயின், செக்குடியரசு ஆகியனவாகும். மேற் குறிப்பிட்ட 4 நாடுகளின் வீரர் - வீராங்கனைகளின் ஆட்டத்தின் ஒவ்வொரு செட்களி லும் அதிரடியாக விளையாடுவார்கள். குறிப்பாக ரஷ்யா, பெலாரஸ் வீராங்கனை களின் அதிரடி ஆட்டம் மிக மோசமாக இருக்கும். ரிட்டர்ன் ஷாட், சர்வீஸ் ஆகியவை மின்னல் வேகத்தில் பாயும். செக்குடியரசு வீரர் - வீராங்கனைகளுக்கு போதுமான உடல்வாகு (ஜிம் பிட்) இல்லையென்றாலும் அதிரடியில் தூள் கிளப்புவார்கள். ஸ்பெயின் வீரர் - வீராங்கனைகள் சர்வீஸ்களில் அனலை கிளப்புவார்கள். டென்னிஸ் உலகில் இந்த நாடுகள் ஸ்பெஷல் மட்டுமல்ல, இவர்களது ஆட்டம் குத்துச்சண்டை போல சுவாரஸ்யமாக இருக்கும்.
அதிரடி நாயகர்கள்