games

img

சந்தோஷ் கோப்பை கால்பந்து கேரள அணிக்கு குவியும் பாராட்டு

நாட்டின் முதன்மையான கால்பந்து தொடரான சந்தோஷ் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் போட்டியை நடத்தும் கேரளா, அண்டை மாநிலமான கர்நாடகாவை எதிர்கொண்டது.  தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் கேரள அணி 7-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை பந்தாடி இறுதிக்கு முன்னறியது. ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் சுழல வைத்து, அதிரடி கோல்களால் இறுதிக்கு முன்னேறிய கேரள அணிக்கு சமூகவலைத் தளங்களில் பாராட்டுக்கள் குவிகிறது. திங்களன்று இறுதி ஆட்டம் நடைபெறு கிறது. மேற்குவங்கம் - மணிப்பூர் இடையே அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி மே 2-ஆம் தேதி கேரள அணியுடன் இறுதி போட்டியில் மோதும். (மாலை 5 மணி நிலவரம்).

ஐபிஎல் 

இன்றைய ஆட்டங்கள்

குஜராத்-பெங்களூரு(43வது லீக்)
நேரம்: மாலை 3:30 மணி 
இடம்; பிராபோர்ன் மைதானம், மும்பை

ராஜஸ்தான்- மும்பை(44வது லீக்)
நேரம்: இரவு 7:30 மணி 
இடம்; பாட்டில் மைதானம், மும்பை