games

img

இந்திய கால்பந்து அணியை தேர்வு செய்த ஜோதிடர்?

தில்லி, செப். 12- இந்திய தேசிய கால்பந்து அணி யின் ஆடும் லெவனை ஜோதிடர் ஒருவர் தேர்வு செய்த சம்பவம் விளை யாட்டு உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதநம்பிக்கை உள்ள வீரர் - வீராங்கனைகள் போட்டிக்கு முன்னரோ அல்லது போட்டியின் பொழுது சாதி க்கும் வகையில் எதாவது சம்பவங் களை அரங்கேற்றினாலோ அல் லது போட்டி முடிந்த பின்னரோ தங் களுக்கு பிரியப்பட்ட கடவுள்களை வணங்குவது ஆகும். அதற்கு மேல்  என்றால் ஜோதிடரின் அறிவிப்பு மூலம் ராசியான எண்ணை ஜெர்ஸியில் அணிந்து விளையாடுவார்கள். இவ்வ ளவுதான் விளையாட்டு உலகில் நடை முறையில் உள்ள இரண்டு மூட நம்பிக்கை செயல் ஆகும். ஆனால்  விளையாட்டு உலகையே அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ள ஒரு சம்பவம் இந்திய விளையாட்டு உலகில் அரங்கேறியுள்ளது. அது யாதெனில் இந்திய தேசிய கால்பந்து அணியின் வீரர்களை ஜோதிடர் ஒருவர் தேர்வு செய்து உள்ளதுதான்.

ஜோதிடர் பூபேஷ் சர்மா

நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லி புறநகரை சேர்ந்த ஜோதிடர் பூபேஷ் சர்மா. இவரை இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தலைமைப் பயிற்சி யாளர் இகோர் ஸ்டிமேக்கிற்கு அறி முகம் செய்து வைத்துள்ளார். அதன் பின் இந்திய அணியின் முக்கிய போட்டி களில் விளையாடும் ஆடும் லெவன் தேர்வு ஜோதிடரின் அறிவுரைப்படி தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமேக் தேர்வு செய்துள்ள விவ காரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாற்று வீரரையும்  தேர்வு செய்த அவலம்

கடந்த 2022-இல் ஜூன் மாதம்  11 அன்று நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரின் போது மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானிஸ் தானுக்கு எதிரான ஆட்டத்திற்கான இந்திய அணியின் “ஆடும் லெவன்” வீரர்கள் பட்டியலை இரண்டு நாள் களுக்கு முன்னதாகவே ஜோதிடர் பூபேஷ் சர்மா பயிற்சியாளருக்கு அனுப்பியுள்ளார். ஒவ்வொரு வீரரின் நட்சத்திரத்தை ஆராய்ந்து இவர் இன்று நன்றாக விளையாடுவார், இவர் மீது எதிர்பார்ப்பு வைக்க வேண் டாம், இவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பயிற்சியாளருக்கு ஜோதிடர் அறிவுரை வழங்கியுள்ளார். போட்டித் தொடங்கும் போது இந்திய கால்பந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில் மிகவும் சிறந்த வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஏனென் றால் அன்றைய தினம் அவர்களது நட்சத்திரங்கள் சாதகமாக இல்லை  என்று ஜோதிடர் குறிப்பிட்டிருந்தது தான் காரணம். இது மட்டுமல்ல ஆடும் லெவன் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரரையும் ஜோதிடரே பரிந்துரைத் துள்ளார்.  இதுபோக மே மற்றும் ஜூன்  மாதங்களில் நடைபெற்ற ஜோர்டன்,  கம்போடியா, ஹாங்காங் அணி களுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணியையும் ஜோதிடர் பூபேஷ் சர்மாவே தேர்வு செய்து கொடுத்துள் ளார். ஜோதிடர் பூபேஷ் சர்மாவுக்கும், இகோர் ஸ்டிமேக்கிற்கும் இடையே நடைபெற்ற  நூற்றுக்கணக்கான ஆடி யோக்கள் மூலமே இந்த விஷயம் வெளியில் கசிந்துள்ளது. 

திறமைக்கு வேட்டு 

இந்திய கால்பந்து அணியை தேர்வு செய்த ஜோதிடர் விவகாரம் வீரர்கள் தேர்வு முறையில் இருக்கும் வெளிப்படைத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இதில் அதிர்ச்சிகரமான விசயம் என்ன வென்றால் கால்பந்து அணியில் விளை யாடும் வீரர்களைப் போலவே, அவர் களைத் தேர்வு செய்ததற்கு ரூ. 12 முதல் 15 லட்சம் வரை ஜோதிடருக்கு சம்பளமும்  வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. விளை யாட்டு வீரர்கள் தேர்வு என்பது வீரர்களின் திறமை, புத்திகூர்மை, ஆக்ரோஷம் ஆகியவற்றை கொண்ட தாகும். ஆனால் ஜோதிடம் என்ற  மூடநம்பிக்கையால் வீரர்களின் திற மை, விளையாட்டு வாழ்க்கை அனை த்தும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.