games

img

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 2023

மகளிர் 9-வது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடு களில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், புதனன்று நடை பெற்ற “குரூப் ஜி” பிரிவிற்கான லீக் ஆட்டத்தில் சுவீடன் - அர்ஜெண்டினா அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுவீடன் அணி 2-0 என்ற கணக்கில் அர்ஜெண்டி னா அணியை வீழ்த்தியது.  லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத சுவீடன் அணி நாக் அவுட்  சுற்றுக்கு  முன்னேறிய நிலையில், ஒரு  வெற்றியை கூட ருசிக்காத அர்ஜெண்டி னா அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

அர்ஜெண்டினா ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த ஆண்டு நடைபெற்ற 22-வது சீசன் ஆடவர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதே  போல மகளிர் உலகக்கோப்பை தொட ரிலும் அர்ஜெண்டினா அணி பட்டம் வெல்லும் என அந்நாட்டு ரசிகர்கள் ஆவ லுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் குவிந்தனர். ஆனால் அர் ஜெண்டினா மகளிர் அணி ஒரு லீக் ஆட்டங்களில் கூட  வெற்றியை  ருசிக்காமல் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அபாரம்

“குரூப் ஜி” பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இத்தாலி அணிகள் மோதின. இரு அணி வீராங்கனைகளும் கோலடிக்க தீவிர  முயற்சி மேற்கொண்டதால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறந்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 3-2 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னே றியது. போதுமான அளவு புள்ளிகள் இல்லாததால் இத்தாலி அணி வெளியேறியது.

இன்றுடன் லீக்  ஆட்டங்கள் நிறைவு

வியாழனன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதுதான் இறுதிக்கட்ட லீக் ஆட்டங்கள் ஆகும். அதன் பிறகு ஆகஸ்ட் 5 அன்று நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. 

இன்றைய லீக் ஆட்டங்கள்
கொலம்பியா - மொரோக்கோ
நேரம் : மதியம் 3:30 மணி
தென் கொரியா - ஜெர்மனி
நேரம் : மதியம் 3:30 மணி
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், பேன்கோடு (ஒடிடி)

ஒருநாள் தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி

டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், அடுத்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் வெற்றியை ருசித்த நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செவ்வாயன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி சப்மன் கில் (85), இஷான் கிசான் (77), ஹர்திக் பாண்டியா (70) ஆகியோரின் அதிரடியால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது.  352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி,  ஷர்துல் (4), முகேஷ் (3) ஆகியோரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் 151 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக சப்மன் கில்லும், தொடர் நாயகனாக இஷான் கிஷானும் தேர்வு செய்யப்பட்டனர்.

இன்று டி-20 தொடர் தொடக்கம்
செவ்வாயன்று ஒருநாள் தொடர் நிறைவுபெற்ற நிலையில்,  ஒருநாள் இடைவெளிக்குப் பின் இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையே டி-20 தொடர் தொடங்குகிறது. அதாவது 5 போட்டிகளை கொண்ட இந்த டி-20 தொடரின் முதல் ஆட்டம் வியாழனன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியா - மே. இ. தீவுகள்
இடம் : லாரா மைதானம், டிரினிடாட்
நேரம் : இரவு 8:00 மணி
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா