19 சிக்ஸர்கள் புதிய வரலாறு படைத்த நியூஸி., வீரர் பின் ஆலன்
இந்தியாவில் ஐபிஎல் போட்டி யைப் போன்று அமெரிக்கா வில் எம்எல்சி (மேஜர் லீக் கிரிக்கெட்) டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சான்பிரான்சிஸ்கோ அணிக்காக விளையாடி வரும், நியூஸிலாந்து வீரர் பின் ஆலன் வாஷிங்டன் அணிக்கெதிரான ஆட்டத்தின் போது 51 பந்துகளில் 151 ரன்கள் குவித்து, அதிவேக சதம் அடித்து அசத்தியுள்ளார். இதில் 19 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 269.08 ஆகவும் இருந்தது. இந்நிலையில், இந்தப் போட்டியின் மூலம் ஒரே இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் அடித்து பின் ஆலன் உலக சாதனை யை நிகழ்த்தியுள்ளார். இதற்குமுன் வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் கிரீஸ் கெயில் (ரங்பூர் அணிக்காக - 2017ஆம் ஆண்டு) 18 சிக்ஸர் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. அதே போல 2013ஆம் ஆண்டு ஐபிஎல் பெங்களூரு அணிக்காக 17 சிக்ஸர்கள் அடித்து இருந்தார் கிரீஸ் கெயில்.
123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவிக்க, வாஷிங்டன் அணி 13.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. இதன்மூலம் 123 ரன்கள் வித்தியாசத்தில் சான்பிரான்சிஸ்கோ அணி அபார வெற்றி பெற்றது.
பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி நீக்கம்?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேசத்திற்கு எதி ராக டி-20 தொடர்களில் விளையாட உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு அடுத்த வாரம் நடைபெற உள்ளது. முன்னாள் வீரர்களான ஜாவேத், அலீம் தார், அசார் அலி மற்றும் ஆசாத் ஷபிக் ஆகியோர் அடங்கிய தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்ய உள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணி யின் மூத்த வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி ஆகியோருக்கு இனி டி-20 போட்டி களில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தேர்வுக்குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பாகிஸ்தான் ரசிகர் களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் பயிற்சி யாளர் மைக் ஹெசன்,”பாபர், ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் ஆகியோர் இனி டி-20 தொடருக்கு தேவையில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியிருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங் வாய்ஸ்
இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும்; அவர் விடுவிக்கப்பட வேண்டிய வீரர் அல்ல; கடந்த ஒரு வருடமாக ஸ்ரேயாஸ் ஐயர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்; சிறந்த பார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரை நான் என்னுடைய அணியில் இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.
- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி -
டிஎன்பிஎல் இன்றைய ஆட்டங்கள்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஜியோ ஸ்டார் (ஓடிடி)
சென்னை - கோவை நேரம் : மதியம் 3:15 மணி
திண்டுக்கல் - மதுரை நேரம் : இரவு 7:15 மணி