games

img

ஜோதிடர் மூலம் கால்பந்து வீரர்கள் தேர்வா?

புதுதில்லி, டிச.10- இந்திய அணிக்கு கால்பந்து வீரர்  களை தேர்வு செய்யும் பணிக்கு ஜோதி டர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அது உண்மைதானா? என்று சு. வெங்க டேசன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு, நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி, ஒன்றிய அமைச்சர் மழுப்பலாக பதில ளித்து நழுவியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சரிடம், இந்தியக் கால்பந்து குழு வீரர்களை  தேர்ந்தெடுக்க அகில இந்திய கால்  பந்து கூட்டமைப்பு ஜோதிடர் ஒருவ ரின் பணியை பயன்படுத்தியுள்ளதாக வந்துள்ள செய்தி அரசுக்கு தெரியுமா? தெரியும் எனில் விவரங்களை தாருங்  கள்... இப்படிப்பட்ட செயல்பாடுகள் இந்தியாவின் மதிப்பை உலக அரங் கில் கெடுத்து விடாதா? இதுகுறித்து அரசு ஏதேனும் அறிவுரைகளை அகில  இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதா? என்று நட்சத்திரக் கேள்வி எண் 38/05.12.2023 வாயிலாக  சு. வெங்கடேசன் எம் பி கேள்வி எழுப்பி யிருந்தார்.

அதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், இப்பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (எ) ராகுல் மேரா மற்றும் இதரர் வழக்கு (எண் 3047 -48 : 2022) தொடர்புடையது; உச்ச  நீதிமன்ற ஆணையின்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள தடய தணிக்கை அறிக்கை வரம்பிற்குள் வரக்கூடியது; உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு சட்ட ஆலோசகர் அந்த அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தந்துள்ளார்; எனவே இது குறித்த விவரங்களை அரசு பகிர்ந்து கொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளார்.