games

img

விளையாட்டு...

ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழக்கவில்லை :  நலமாக உள்ளார்

4 மணிநேரம் பரபரப்பை ஏற்படுத்திய வதந்தி

ஹீத் ஸ்ட்ரீக்

முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்ட ருமான ஹீத் ஸ்ட்ரீக் 1993 முதல் ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச போட்டிகளில் காலடி வைத்தார். மிரட்டல் வேகப்பந்துவீச்சாளரான ஹீத் ஸ்ட்ரீக் 65 டெஸ்ட் போட்டி களில் விளையாடி 1,990 ரன்கள் விளாசி 216 விக்கெட்டு களை வீழ்த்தியுள்ளார். மேலும் 189 ஒருநாள் போட்டி களில் விளையாடி 2,942 ரன்கள் குவித்து 239 விக்கெட்டு கள் வீழ்த்தி ஜிம்பாப்வே அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். டெத் வகை பவுன்சர்களை வீசுவதில் கைதேர்ந்தவர் ஹீத் ஸ்ட்ரீக். சாம்பியன் அணிகள் கூட இவரது பந்துவீச்சை கணிக்க போராடும். அந்தளவுக்கு கிரிக்கெட் உலகை மிரட்டி வந்த ஸ்ட்ரீக் 2005 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு தலைமை பயிற்சியாளராகவும், வங்கதேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு ஆலோசனை மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், ஐபிஎல் தொடரில் குஜராத், கொல்கத்தா ஆகிய அணிகளுக்கும் பயிற்சி வழங்கியுள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் (49) புற்றுநோய் வீரியத்தால் திங்களன்று காலமானதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் வெளியாகியது. ஒருநாள் (செவ்வாய்) இடைவெளிக்குப் பின்னர் புதனன்று காலை விளையாட்டு உலகின் முக்கிய செய்தியாக வலம் வர கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்த நிலையில், தான் உயிருடன் இருப்பதாக ஹீத் ஸ்ட்ரீக்-கே நேரடியாக பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,”நான் உயிரிழந்துவிட்டதாக யாரோ ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதால் மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அது சரியான தகவல் அல்ல. இதுபோன்ற வதந்திகளை பரப்புவதற்கு முன்பு மக்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நான் இப்போது நலமுடன் இருக்கிறேன். புற்றுநோயில் இருந்து மீண்டு இப்போது வீட்டில் உள்ளேன். சிகிச்சை முறை கொஞ்சம் வலி தருகிறது. நான் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறேன்” என வேதனையுடன் கூறியுள்ளார்.

5 மணிநேரத்திற்கு பின்பே தெரியும்

தான் உயிரிழந்ததாக வெளியான செய்தி உலகம் முழுவதும் முக்கிய செய்தியாக பரவினாலும் ஹீத் ஸ்ட்ரீக்கு தெரியவில்லை. காரணம் புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஹீத் ஸ்ட்ரீக் சமூக வலைத்தளங்களில் தொடர்பு இல்லாமல் இருந்துள்ள நிலையில், நண்பர்கள்,  உறவினர்கள் மூலம் சுமார் 5 மணிநேரம் கழித்து தகவல் தெரியவர தான் உயிரோடு இருப்பதாக அவரே அறிவித்துள்ளார். ஹீத் ஸ்ட்ரீக் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங் களில் பதிவிட்ட நபரை ஜிம்பாப்வே காவல்துறையினர் சைபர் கிரைம் மூலம் தேடி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டிலும் பாலின சமத்துவம்

கிரிக்கெட் உலகில் முக்கியமான அணிகளில் ஒன்றான  தென் ஆப்பிரிக்க அணி, புதிய அறிவிப்பு ஒன்று  வெளியிட்டு பாராட்டைப் பெற்றுள்ளது. அந்த அறிவிப்பு யாதெனில் பாலின பாகுபாட்டை தவிர்க்கும் விதமாக ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என அந்நாட்டு  கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  3-வது அணி கிரிக்கெட் உலகில் ஆடவருக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில்,  இந்தியா, நியூசி லாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் சம்பள  விகிதத்தில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தியது. மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இதுபற்றி ஆலோசித்து வரும் நிலையில், சம்பள விகிதத்தில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்திய மூன்றாவது நாடு என்ற பெருமையை தென் ஆப்பிரிக்கா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.