games

img

மீண்டும் “கால்”பதிக்கும் எரிக்சன்! - ரசிகர்கள் உற்சாகம்

கால்பந்து களத்துக்கு மீண்டும் திரும்பி யிருக்கும் கிறிஸ்டியன் எரிக்சன்  உலக ரசிகர்களையும் சக வீரர் களையும் நெகிழ வைத்திருக் கிறார்.  ஐரோப்பாவின் மிகப் பெரிய கால்பந்து திருவிழாவான யூரோ கோப்பை கால்பந்து தொடர் 2020  ஆம் ஆண்டு கொரோனா வைரஸ்  பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.  ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு அந்த போட்டிகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. ஜூன் மாதம் 11ஆம் தேதி பின்லாந்து அணியை எதிர்த்து டென்மார்க் அணி விளையாடிக் கொண்டிருந்தது. இந்த ஆட்டத்தின் 42வது நிமிடம் கால் பந்து உலகையே சில வினாடிகள் மயான அமைதிக்கு கொண்டு சென்றது. 

இதற்குக் காரணம், டென்மார்க்கின் நட்சத்திர வீரரான  29 வயதாகும் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென்று நிலை குலைந்து மைதானத்திற்குள் தரையில் சாய்ந்தார். மூச்சுப் பேச்சின்றி நினைவுகளை இழந்தார். அசை வற்றுக் கிடந்ததால் உடனடியாக போட்டிநிறுத்தப்பட்டது. அந்த ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கிறிஸ்டியன் எரிக்சனின் மனைவி பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து உடனடியாக தடுப்புகளை தாண்டி,  பதறிடித்துக் கொண்டு ஓடி வந்தார். இந்த நிகழ்வு எல்லோரையும் கண்கலங்க வைத்தது. அடுத்த சில வினாடிகளில் மருத்துவக் குழு கால்பந்து மைதானத்திற்குள் ஓடிவந்தது. சக வீரர்களுடன் மருத்துவக் குழுவும் கிறிஸ்டியனின் மூச்சையும், நாடியை யும் மீட்கப் போராடின. ஆனாலும், நிலைமை மிக மோசமாகிக் கொண்டே சென்றது. நினைவு திரும்பும் வரை ஒன்றும் செய்ய முடியாது என்று மருத்துவக்குழு கைவிரித்து விட்டது. இந்த சூழ்நிலையில்,  பாதியில் நின்ற ஆட்டத்தை தொடர முடியாமல் டென்மார்க் மட்டு மின்றி பின்லாந்து வீரர்களும் சோகத்தில் மூழ்கினர். ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு போட்டியை நிறுத்துவதாக அறிவிப்பு செய்தது.

கால்பந்து களத்தில் இருந்து ஸ்டிரெச்சரில் வைத்து  மருத்துவமனைக்கு கொண்டு சென்று கிறிஸ்டியனுக்கு மருத்துவக் குழு தொடர்ந்து மேற்கொண்ட, கார்டியோ பல்மனரி ரிசுசிடேஷன் என்று அழைக்கப்படும் சிபிஆர்  சுவாச மீட்பு முதலுதவி சிகிச்சை மூலம் நாடித்துடிப்பை அதிகரிக்கச் செய்தது. இந்த சிகிச்சையால் பிழைத்து விட்டார் என்ற செய்தி மைதானத்துக்குள் வந்தவுடன் அனைவரும் ஒரு நிமிடம் ஆனந்தத்தில் துள்ளி குதித்த னர். பாதியில் நின்ற ஆட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர்.  முதன் முறையாக யூரோ கோப்பைக்கு தகுதி பெற்று விளையாடும் பின்லாந்து அணி அடித்த முதல் கோலை கிறிஸ்டியன் எரிக்சனுக்கு அர்ப்பணித்தனர்.

கிறிஸ்டியன் எரிக்சன் யார்?

டென்மார்க்கின் மிடில் ஃபார்டி நகரில் பிறந்து வளர்ந்தவர். மூன்று வயதை எட்டுவதற்கு முன்பே கால்பந்தை உதைக்க தொடங்கியவர். 13 வயதில் டேனிஷ் தொழில்முறை கால்பந்து அணியின் கிளப் அணிக்காக விளையாட துவங்கினார்.  அவரது ஆட்டத்தை பார்த்த  பலரும் பிரகாசமான எதிர்காலம் இருப்பதை அப்போதே  உறுதி செய்தனர். பயிற்சியாளரும் அந்த நம்பிக்கை யை உறுதி செய்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ஒரு மில்லியன் யூரோ மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்போது வயது அவருக்கு 15. அந்தப் ஒப்பந்தம் மூலம்  டென்மார்க் அண்டர்- 17 கால்பந்து அணியில் விளை யாடும் வாய்ப்பு தேடி வந்தது. 

தனது அசுரத்தனமான ஆட்டத்தால் டேனிஷ் கால்பந்து சங்கத்தால் ‘ஆண்டின் திறமையான வீரர்,  விருதை தட்டினார். தனது 18 ஆவது வயதில் டென்மார்க்கின் தேசிய அணிக்காக சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அடுத்தடுத்த தாக்குதல் ஆட்டத்தால் பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்க்  அணிக்காக விளையாடும் இளம் வீரர் என்ற பெருமை யை பெற்றார். அதுமட்டுமன்றி அதிக ஆல்-டைம் கோல் அடித்த ஏழாவது வீரர் இவர்தான். டென்மார்க்கின் மிகச்சிறந்த தாக்குதல் மிட்பீல்ட ரான இவருக்கு மூன்று முறை “டேனிஷ் கால்பந்து வீரர்” உள்பட பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன. சிறந்த டச்சு கால்பந்து வீரருக்கான வெண்கல காலணி விருதை யும் வென்றிருக்கிறார். பிரிமியர் லீக் கால்பந்து போட்டி யில் அதிக கோல் அடித்த டென்மார்க் வீரர் என்ற சாதனை யையும் படைத்திருக்கிறார்.

டென்மார்க் ஊடகங்களால் ‘கிளாசிக் நம்பர் டென்’ என்று வர்ணிக்கப்படும் எரிக்சன், கால்பந்து களத்தில் முன் கள வீரர்களுக்கு பின்னால்  தாக்குதல் நடத்தும் மிகச் சிறந்த நடுகள வீரர். இரண்டு கால்களாலும் பந்தை கடத்தும் வல்லமை படைத்த எரிக்சன், தூரத்தில் இருந்தும் துல்லியமாக ஷார்ட் அடிப்பதில் கில்லாடி. கால்பந்து உலகமே எதிர்பாராத நிலையில், அசை வற்று கிடந்த கிறிஸ்டியன் எரிக்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் சிகிச்சையால் மீண்டெழுந்தார். ஆனாலும் அவரால் தொடர்ந்து கால்பந்து விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. இத்தாலி நாடு இண்டர் மிலன் கிளப்புக்கு விளையாட கிறிஸ்டியன் எரிக்சனை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் அவர் விரைவில் கால்பந்து மைதானத்திற்குள் மீண்டும் கால் பதிப்பார் என்பது உறுதியாகிவிட்டதால் கிறிஸ்டியன் எரிக்சனின் ஆட்டத்தை காண்பதற்கு ரசிகர்களும் உலக கால்பந்து ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

- சி.ஸ்ரீராமுலு