புரோ கபடி 2024 : புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா தமிழ்நாடு?
குறுகிய காலத்தில் பிரபலமடைந்துள்ள புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் தற்போது நடுக்கட்டத்தை தாண்டி யுள்ள நிலையில், புதனன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் 2-ஆவது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை தமிழ்நாடு அணி எதிர்கொள்கிறது.
தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ள தமிழ்நாடு அணி தற்பொழுது சூப்பர் பார்மில் உள்ள நிலையில், தனது 15-ஆவது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மேல்நோக்கி பயணிக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.
தற்பொழுது 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ்நாடு அணி 5 வெற்றி, 9 தோல்வி என 30 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 10-ஆவது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றால் கிடைக்கும் (7 புள்ளிகளுக்கு மேல்) புள்ளிகள் மூலம் 9 முதல் 6-ஆவது இடம் முன்னேறும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.