புரோ கபடி லீக் இன்றைய ஆட்டத்தில் பெங்கால் அணி பலம் வாய்ந்த டெல்லி அணியையும், குஜராத் அணி, யுபி யோதா அணியையும் எதிர்கொள்கின்றன.
8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் டிசம்பர் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும்.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புனே மற்றும் பாட்னா அணிகள் மோதின. இதில் பாட்னா அணி 38-26 என்ற கணக்கில் புனே அணியை வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் யுபி யோதா அணியை, ஜெய்ப்பூர் அணி வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று இரவு இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி பலம் வாய்ந்த டபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் யுபி யோதா அணியும் எதிர்கொள்கின்றன.