games

img

விளையாட்டு - தமிழ்நாட்டில் புரோ கபடி

தமிழ்நாட்டில் புரோ கபடி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போல குறுகிய காலத்தில் பிரபலமடைந்துள்ள புரோ கபடி லீக் தொடரின் 10-ஆவது சீசன் தற்பொழுது நடுக்கட்டத்தை நெருங்கியுள்ளது.  இந்நிலையில், இந்த தொடரின் 3-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் புதனன்று நிறைவு பெற்ற நிலையில், 4-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் வெள்ளியன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் புரோ கபடி லீக் தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறை என்ற நிலையில், ரசிகர்கள் இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தமிழ்நாட்டில் டிசம்பர் 27 வரை மொத்தம் 11 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு அணி 4 லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது.

புரோ கபடி 2023
இன்றைய ஆட்டங்கள்

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்

தமிழ்நாடு - பாட்னா
(34-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி

ஹரியானா - தெலுங்கு டைட்டன்ஸ்
(35-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி

குறிப்பு

தீக்கதிர் விளையாட்டுச் செய்தி தொகுப்பில் புரோ கபடி அணிகளின்  பெயர் முழுமையாக குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், இனி மாநில மற்றும் மாநிலங்களின் தலைநகர் பெயரிலேயே அணிகள் பெயர் குறிப்பிடப்படும். தெலுங்கு டைட்டன்ஸ் அணி மட்டும் ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களை சேர்த்து இருப்பதால் அந்த அணி மட்டும் அதன் பெயரிலேயே குறிப்பிடப்படும்.

டிக்கெட்டுகள் பெற...

புரோ கபடி லீக் டிக்கெட்டுகள் பெற புக் மை ஷோ (BOOK MY SHOW) தளத்தில் பெறலாம். டிக்கெட்டுகள் பெற லிங்க் : https://in.bookmyshow.com/ (டிக்கெட் விலை ரூ.500 முதல் ரூ.6000 வரை நிர்ணயிக்கட்டுள்ளது)

நேரு மைதானம் செல்வது எப்படி?

புரோ கபடி தொடர் நடைபெறும் ஜவஹர்லால் நேரு உள்ளரங்க விளையாட்டு மைதானம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதான வளாகத்தில் உள்ளது. இந்த மைதானம் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில்வே நிலையத்திற்கு மிக அருகில் உள்ள நிலையில், சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் செல்லும் பேருந்து கள், ரயில்கள், மெட்ரோவில் பயணித்து ராஜாமுத்தையா சாலை வழியாக சென்றால் ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு செல்லலாம். முகவரி : ராஜாமுத்தையா சாலை, கண்ணப்பர் திடல், பெரியமேடு (சென்னை சென்ட்ரல்), சென்னை-600003

மைதானத்தில் கூட பாலின வேறுபாடு

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்றுவிதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத் தின் தொடக்க நிகழ்வான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா தலை நகர் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வியாழனன்று தொடங்கி யது. ஆடவர் சர்வதேச போட்டி மற்றும் ஐபிஎல் போட்டிகளின் பொழுது வான்கடே மைதானம் டைல்ஸ் கற்களில் வரையப்படும் ஓவியம் போன்று பளபளப்பாக இருக்கும். ஆனால் தற்பொழுது இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் விளையாடிக் கொண்டிருக்கும் அதே வான்கடே மைதானம் மற்றும் பிட்ச் பகுதிகள் மலைச்சாரலில் உள்ள செம்மண் சாலைகள் போன்று அலங்கோலமாக உள்ளன. இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் விளையாடி வரும் போட்டி சர்வதேச அளவிலானது என்ற நிலையில், போதுமான அளவு பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் பெயரளவிற்கு சுத்தம் செய்து போட்டி யை நடத்தி வருகிறது வான்கடே மை தான நிர்வாகம். விளையாட்டு உல கில் பாலின வேறுபாட்டை நீக்க பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வரும் நிலையில், மைதான பரா மரிப்பில் கூட பாலின  வேறுபாட்டை பார்க் கும் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் செயல் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.