8-வது சீசன் புரோ கபடி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடக்கத்தில் சுமாராக விளை யாடி வந்த ஹரியானா (ஹரியானா ஸ்டீலர்ஸ்) திடீரென உதவேகம் பெற்று புள்ளிப்பட்டி யலில் டாப் ஆர்டரில் பயணித்து வருகிறது. அதாவது இந்த அணி தேறாது என கணிக்கப்பட்ட அணி தான் இன்று சாம்பியன் அணிகளை மிரட்டி வருகிறது. அசால்ட்டாக விளையாடி வந்த சாம்பியன் மற்றும் வலு வான அணிகள் கூட ஹரியானா அணியை பார்த்து சற்று நடுங்கிய எண்ணத்துடன் விளை யாடி தோல்வியை ருசித்து வருகின்றன.
நட்சத்திர வீரர்கள் இல்லை
ஹரியானா அணியில் நட்சத்திர வீரர்கள் என அப்படி யாரும் கிடையாது. எல்லாம் சாதா ரண வீரர்கள் தான். ஆனால் வலுவான பயிற்சி, துல்லியமான கணிப்பு என அனைத்தி லும் திறம்பட செயல்பட்டு வருவதால் தொடர் வெற்றியுடன் குறுகிய காலத்தில் 4-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளனர். குறிப்பாக கடைசி 5 ஆட்டத்தில் தலா ஒரு தோல்வி, டிரா என 3 வெற்றியை ருசித்துள் ளனர்.
கூட்டு முயற்சி
பெங்களூரு அணி பவனை நம்பி உள்ளது. தில்லி அணி நவீனை நம்பியுள்ளது. பாட்னா மோனு கோயத்தையும், தமிழ்நாடு அணி மன்ஜீத், சுர்ஜீத், பிரபஞ்சன் ஆகியோரை எதிர்பார்த்து தான் நாள்தோ றும் களமிறங்கும். இதே போல மேலும் சில அணிகள் களமிறங்குகின்றன. ஆனால் ஹரி யானா அணி அப்படி அல்ல. ,”நாங்கள் யாரை யும் தனிப்பட்ட முறையில் நம்பி இல்லை. கூட்டாக தான் எதிரணியை வீழ்த்துவோம்” சொற்றொடருக்கு ஏற்ப களமிறங்கி எதிரணி களை துவம்சம் செய்து வருகிறது. முக்கியமாக இதே பார்மில் ஹரியானா அணி முன்னேறினால் கண்டிப்பாக முதல் முறையாக கோப்பை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டங்கள்
பெங்கால்-குஜராத்(இரவு 7:30)
பெங்களூரு-உத்தரப்பிரதேசம்(இரவு 8:30)
இரண்டு ஆட்டங்களும் பெங்களூருவில் நடைபெறுகிறது.