games

img

தீக்கதிர் விளையாட்டு செய்திகள்

நியூயார்க்
உலகக்கோப்பை கால்பந்து 2026
தேதி, மைதானங்கள் அறிவிப்பு

உலகில் ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டிக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டுத் தொட ராக இருப்பது உலகக்கோப்பை கால்பந்து ஆகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உல கக்கோப்பை தொடரின் 23-ஆவது சீசன் 2026-ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் கூட்டாக நடத்த உள்ளன. 

இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடருக்கான தேதிகள் மற்றும் மைதானங்களின் பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) வெளியிட்டுள்ளது. அதில், “2026-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடர் ஜூன் மாதம் 11-ஆம் தேதி மெக்சிகோ நாட்டின் தலைநக ரான மெக்சிகோ சிட்டி நகர மைதா னத்தில் தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளி லும் மொத்தம் 16 நகரங்களில் 104  போட்டிகள் நடத்தப்பட உள்ள நிலை யில், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலேயே நடத்தப்பட உள்ளது. இறுதிப்போட்டி ஜூலை 19-ஆம் தேதி அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள மெட்லைப் மை தானத்தில் நடைபெற உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
1994-ஆம் ஆண்டிற்கு பிறகு 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் வட அமெரிக்க கண்டத்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடை பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விசாகப்பட்டினம் டெஸ்ட்
இந்திய அணி அபார வெற்றி

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-ஆவது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரான விசாகப்பட்டினத்தில் கடந்த வெள்ளியன்று தொடங்கியது.  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (209) இரட்டை சதத்தின் உதவியால் முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி  தனது முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 143 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி மிடில் ஆர்டர் வீரர் சப்மன் கில்லின் (104) சதத்தின் உதவியால் 78.3  ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆட்ட மிழந்து, இங்கிலாந்து அணிக்கு வெற்றி  இலக்காக 399  ரன்கள் நிர்ணயம் செய்தது.

  மிகக்கடினமான இலக்குடன் கள மிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் கிராவ்லி (73) மட்டுமே  இந்தியாவின் பந்துவீச்சை சிறப்பாக  எதிர்கொண்டார். இவர் ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்து அணியின் பின்வரிசை வீரர்கள் சீட்டுக்கட்டாய் சரிய, பென் போக்ஸ் (36), டாம் ஹார்ட்டிலி (36) ஆகியோர் இறுதிக் கட்ட போராட்டம் நடத்தினர். இவர் களை பும்ரா வெளியேற்ற இங்கிலாந்து அணியின் 2-ஆவது இன்னிங்ஸும் முடிவுக்கு வந்த நிலையில், 106  ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக இரண்டு இன்னிங்சிலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.  5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில், 3-ஆவது டெஸ்ட் போட்டி பிப்., 15-ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.