games

img

விளையாட்டு செய்திகள்

ஆகாஷ் தீப் மிரட்டல்

இங்கிலாந்து அணி தடுமாற்றம்
5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ளது. முதல் 3 டெஸ்ட் போட்டி முடி வில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், 4-ஆவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் வெள்ளியன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. இந்திய அணியின் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் (வலதுகை - சூப்பர் பாஸ்ட்) மிரட்டலாக பந்துவீசி இங்கிலாந்து அணியின் டாப்  ஆர்டரை (கிராவ்லி (42), டக்கெட் ( 11), போப் (0)) விரை விலேயே பெவிலியனுக்கு அனுப்பினார். அதன்பிறகு அஸ்வின் - ஜடேஜா சூழல் கூட்டணி இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டரை துவம்சம் செய்தது. இதனால் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது.

இதனால் இங்கிலாந்து அணி 150 ரன்னுக்குள் சுருளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனுபவ வீரர் ரூட்(106),  விக்கெட் கீப்பர் பென் போக்ஸ்(47) ஆகியோர் ராஞ்சி மை தானத்தில் நங்கூரம் அமைத்து இங்கிலாந்து அணியை மீட்டனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிதரப்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆகாஷ் தீப் - 313

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளரான (வலது கை)  ஆகாஷ் தீப் (27) மாநில அணி  பிரிவில்  மேற்கு வங்க அணிக்காகவும், ஐபி எல் தொடரில் பெங்களூரு அணிக்காக வும் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் மிகக்குறைந்த போட்டிகளில் (7) விளையாடினாலும் வேகத்திலும், பந்து திசை திருப்பல் திறனை உறுதியாக பெற்றிருப்பதால் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டார். பும்ரா காயம் காரண மாக வெளியேறியதால், 4-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் ஆடும் லெவனில் களமிறக்கப்பட்டார். 

ஆகாஷ் தீப் இந்திய டெஸ்ட் அணியின் 313-ஆவது வீரர் என்ற நிலையில், டிராவிட்டிடம் தொப்பி யை பெற்ற பிறகு சர்பிராஸ் கானைப் போலவே மைதானத்திற்கு அழைத்து வந்திருந்த தனது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கினார்.

துபாயில் கொளுத்தும் வெயில்
விளையாட முடியாமல் திணறும்  வீராங்கனைகள்

அரபு பிராந்தியத்தில் நடைபெறும் முக்கிய சர்வதேச டென்னிஸ் தொடரான துபாய் டென்னிஸ் தொடர் (மகளிருக்கு மட்டும்) கடந்த வாரம் தொடங்கிய நிலையில், தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

துபாய் டென்னிஸ் தொடர் உலகள வில் பிரபலமில்லாத டென்னிஸ் தொடர் இல்லை என்றாலும், கோடிக்கணக்கில் (ஒற்றையர் பிரிவு சாம்பியன் - ரூ.4 கோடி) பரிசுத்தொகை அளிப்பதால், முன்னணி டென்னிஸ் வீராங்கனைகள் இந்த டென்னிஸ் தொடரில் போட்டிப் போட்டு  கலந்து கொண்டுள்ளனர். பரிசுத்தொகை யை மட்டும் கண்டு துபாய் டென்னிஸ் தொடரில் களமிறங்கியுள்ள வீராங்கனை கள் வெயிலின் கொடுமையில் சிக்கி  திணறி வருகின்றனர். சில வீராங்கனை கள் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடி யாமல் காயம் என்று சாக்குப்போக்கு கூறி பாதியிலேயே வெளியேறிவிட்டனர். வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் உடல்வாகுவை கொண்ட வீராங்கனை கள் மட்டும் விளையாடி வருகின்றனர்.

ஆட்டமுறையில் மாற்றம் வேண்டும்
பொதுவாக டென்னிஸ் விளையாட்டு களில் மதியம் 3 மணிக்கு மேல் ஆட்டங்கள் தொடங்கப்படுகின்றன. ஆனால் போட்டியை நடத்தும் நாடுகள் தங்களது பகுதியின் சீதோஷ்ண நிலை யை உணராமல், உலக நாடுகளின்  நடைமுறை என்று ஒரே நேரங்களில் டென்னிஸ் போட்டியை தொடங்கு கின்றன. பாலைவன பூமியான துபாயில் 3 மணிக்கு கூட 36 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும் என்ற நிலையில், அந்நாட்டில் 2 மணிக்கு போட்டிகள் தொடங்குவதால் வீராங்கனைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப போட்டி தொடங்கும் நேரத்தை மாற்றினால் நல்லதாக இருக்கும்.