games

img

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு இந்தியாவின் பி.வி .சிந்து முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் , ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து சாய்னா, உலக சாம்பியனான பி.வி.சிந்து, ஆகிய இரு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பி.வி.சிந்து , உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகேன் யாமாகுச்சியுடன் மோதினார். இந்த போட்டி சுமார் 1 மணி நேரம் 16 நிமிடங்கள் நடந்த்து. 
இதில், முதல் சுற்றில் 16-21 என்ற கணக்கில் சிந்து இழந்தார். அடுத்து நடந்த இரண்டாம் சுற்றில் 21-16 என்ற கணக்கில் வென்று முதல் செட் தோல்விக்கு பதிலடி கொடுத்தார். மூன்றாவது சுற்றில் சிறப்பாக விளையாடிய சிந்து 21-19 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
கடைசியாக, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் அகேன் யாமாகுச்சியை 16-21, 21-16, 21-19 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் சிந்து தாய்லாந்தின் பார்ம்பாவே சோசுவாங்காவுடன் மோதுகிறார்.
 

;