மல்யுத்த வீரர் - வீராங்கனைகளின் ஒற்றுமையை உடைக்க முயற்சி
ஒன்றிய பாஜக அரசு மீது சாக்சி மாலிக் குற்றச்சாட்டு
பாஜக எம்பியும், மல்யுத்த சம்மேளன தலைவரு மான பிரிஜ் பூஷண் சிங்கின் பாலியல் வக்கிரங்களுக்கு எதிராக போராடிய பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்திற்கு, சீனாவில் செப்டம்பர் மாதம் தொடங்கும் ஆசிய விளையாட்டு தொடருக்கான இந்திய மல்யுத்த அணியில் நேரடி தகுதி அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு விதிகளின்படி இது தவறானது என்பதால் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து தில்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு வீரர் - வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர்.
சாக்சி மாலிக் குற்றச்சாட்டு
இந்த போராட்டத்தின் பொழுது ஒலிம்பிக்கில் பதக்கம் பெற முன்னணி வீராங்கனையான சாக்ஷி மாலிக்,”நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராவதற்கு அரசாங்கத்திடம் கூடுதல் அவகாசம் கேட்டு, ஆகஸ்டு 10 அன்று தகுதியை சோதிக்குமாறு கோரியிருந்தோம். அரசாங்கம் கால அவகாசம் வழங்கியது. ஆனால் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகி யோருக்கு ஆசிய விளையாட்டு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அரசாங்கத்தின் முடிவு, மல்யுத்த வீரர் - வீராங்கனைகளின் ஒற்றுமையை உடைக்கும் முயற்சி யாகும். ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்ற காரணத்திற்காக எனது பெயரும் பரிசீலிக்கப்படும் என்று எனக்கு மின்ன ஞ்சல் வந்தது. ஆனால் நான் மறுத்து விட்டேன். தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற நான் விரும்பவில்லை. அனைவருக்கும் நீதியும் நியாய மான தேர்வுக்கான வாய்ப்பும் கிடைக்க வேண்டும். மல்யுத்த வீரர்களின் பெயர்களை நேரடியாக அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையை உடைக்க அரசாங்கம் முயற்சித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த செயலுக்கு பின்னால் உள்ள நோக்கங்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன்” என கூறினார்.
சாக்ஷி மாலிக்கிற்கு குவியும் பாராட்டு
பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்திற்கு அளிக்கப்பட்டது போல சாக்ஷி மாலிக்கிற்கும் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்ச கம் சிறப்பு அனுமதி தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. ஆனால் இதனை சாக்ஷி மாலிக் நிராகரித்துள்ளார். இதற்காக சாக்ஷி மாலிக்கிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது.
தகுதிச் சுற்று கட்டாயம்
பொதுவாக விளையாட்டுத் துறையில் இறுதி போட்டியை விட முக்கியமானது தகுதிச் சுற்றாகும். தகுதி சுற்றில் வெற்றி பெற்றால்தான் தொடக்க சுற்றில் பங்கேற்க முடியும். முக்கியமாக நாட்டிற்காக விளையாடும் தொடர்களில் வீரர் - வீராங்கனைகளின் தகுதிச் சுற்று மிக முக்கியமானது. இப்படி வரலாறு கலந்த விதிகள் இருக்கும் பொழுது எந்த விதத்தில் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. நாட்டிற்காக பல ஆண்டுகளாக விளையாடி வரும் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஏன் இதை ஏற்றுக்கொண்டார்கள் என்பதே பெரிய புதிராக உள்ளது.
பாஜகவின் சூழ்ச்சி?
பாஜக எம்பியும், மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை கோரிய போராட்டத் திற்கு பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். அதாவது இவர்கள் 3 பேர் தான் பிரிஜ் பூஷண் சிங்கிற்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போராட்ட வழியில் நடவடிக்கை மேற்கொண்டவர்கள். இதன் காரணமாகவே இவர்கள் 3 பேருக்கும் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சிறப்பு அனு மதியின் மூலம் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் 3 பேரும் மனமாற்றம் அடைவார்கள், அதன்பிறகு இவர்கள் பாலியல் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் விவகாரத்தை கண்டுகொள்ளமாட்டார்கள், சொந்த கட்சி எம்பியை காப்பாற்றிவிடலாம் என்று கணக்கு போட்டது போல உள்ளது. இதுபோக பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகிய மூவருக்கும் சிறப்பு அனுமதி அளித்தால் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் இடையே மனக்கசப்பு ஏற்படும், இனிமேல் மேற்குறிப்பிட்ட 3 பேர் தலைமையில் எவ்வித போராட்டம் நடத்தமாட்டார்கள் என்பதே ஒன்றிய பாஜக அரசின் கணக்கு. இதன் காரணமாகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட சாக்ஷி மாலிக் சிறப்பான அனுமதியை புறக்கணித்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 2023
இன்று 4 ஆட்டங்கள்
அமெரிக்கா - வியட்நாம்
நேரம் : காலை 6:30 மணி
ஜாம்பியா - ஜப்பான்
நேரம் : மதியம் 12:30 மணி
இங்கிலாந்து - ஹைதி
நேரம் : மதியம் 3:30 மணி
டென்மார்க் - சீனா
நேரம் : மாலை 5:30 மணி