சர்வதேச விளையாட்டுக்களத்திற்கு கண்ணகி நகரிலிருந்து ஒரு வீராங்கனை
எந்தவொரு விளையாட்டும் ஒருவரின் உடல்திறன் மற்றும் மனவலிமையை வளர்க்கும். தமிழ்நாட்டின் அடையாள மான சடுகுடு ஆட்டமான கபடி விளை யாட்டிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஆண்களே கோலோச்சி வந்த விளையாட்டுகளில் தற்போது பெண்கள் களமிறங்கி ஜொலிக்கிறார்கள். அப்படி கபடி விளையாட்டில் தமிழகத்தின் முகமாக ஜொலிப்பவர்தான் கண்ணகி நகரின் வீராங்கனை கார்த்திகா. சென்னை மாவட்டம் துரைப்பாக்கம் ஒக்கியத்தில் உள்ளது கண்ணகி நகர். வாழ்வாதாரத்திற்காக அதிகாலை முதல் இரவு வரை வேலை செய்யும் எளிய மக்கள் வாழும் பகுதியில் இருந்து விளையாட்டுத்துறையில் நட்சத்திரமாக பிரகாசிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கண்ணகி நகர் என்றாலே பிரச்சனைக்குரிய பகுதியாக, மக்கள் மத்தியில் எதிர்மறையான கருத்து, பேச்சுக்கள் கொண்ட பகுதியாக அடை யாளம் காட்டப்படுகிறது. ஆனால் உண்மை முகம் அதுவல்ல. பல்வேறு விளையாட்டுக்களில் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கொண்ட நகராக காணப்படுகிறது. கபடி, கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி போன்ற பல்வேறு விளையாட்டுகளில் சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்பகுதியில் உள்ளனர். மாநில மற்றும் தேசிய அள விலான போட்டிகளில் இவர்கள் பங்கு பெற்று பதக்கங்களை வென்றுள்ளனர். தற்போது கண்ணகி நகர், கபடியின் அடையாளமாக தமிழகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது. கபடி பயிற்சியாளர் ராஜி என்பவரால் பெண்கள் கபடி அணி உருவாக்கப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பள்ளியில் படிக்கின்ற, விளையாட்டுத்திறமை உள்ள மாணவிகளை கண்டறிந்து, அவர்களுக்கு முறையான பயிற்சி யளித்து, ஊக்கமளித்து சிறந்த கபடி வீராங்கனைகளை உருவாக்கியுள்ளார் பயிற்சியாளர் ராஜி. அதில் கண்டெடுத்து உருவாக்கப்பட்டவர்தான் கார்த்திகா. இவரின் தந்தை கட்டிடத்தொழிலாளி.தாயார் துப்புரவுப்பணியாளராக வேலை செய்கின்றனர். 6 ஆம் வகுப்பு பள்ளி மாணவியாக படிக்கும்போதே கபடி களத்தில் இறங்கி யவர். தற்போது தேசிய அணியில் இடம்பெறும் அளவிற்கு முன்னேறி யுள்ளார். இந்த அணியில் உள்ள மற்ற வீராங்கனைகளும் தேசிய அணியில் விளையாடி உள்ளனர். மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களின் அற்புத மான விளையாட்டுத் திறனால் இந்த அணிக்கு தமிழகம் முழுவதும் பெரு மளவில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது மேலும் ஒரு மகுடமாக கண்ணகி நகர் கபடி அணி வீராங்கனை கார்த்திகா எக்ஸ்பிரஸ் என்று ரசிகர் ளால் அழைக்கப்படும் ஆர்.கார்த்திகா சர்வதேச போட்டியில் விளையாட இந்திய கபடி அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் கண்ணகி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி யில் 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டி ருக்கிறார். இந்திய பள்ளி விளையாட்டுகள் அமைப்பு தேசிய அளவில் நடத்திய கபடி போட்டியில் (SGFI) 2023 இல் தமிழ்நாடு அணி முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்த அணியின் கேப்டனாக தலைமையேற்று விளையாடி சிறந்த ஆட்ட வீராங்கனை யாக தேர்வுபெற்றார். தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கு கார்த்திகாவின் ஆட்டம் முக்கியமானது. தேசிய அளவிலான போட்டிகளில் கார்த்திகா பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். 2021,2022 ஆம் ஆண்டு களில் சப்-ஜூனியர் அளவில் விளை யாடி வெள்ளிப்பதக்கம், 2024 ஆம் ஆண்டில் கேலோ இந்தியா (KHELO INDIA ) போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2024 இல் வெள்ளிப்பதக்கம் வென்ற தேசிய ஜூனியர் அணியில் இடம்பெற்றிருந்தார். 2025 இல் தேசிய அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் பயிற்சி முகாமில் பங்கேற்றார். தற்போது தேசிய அணியில் இணைந்துள்ளார். 3 ஆவது ஆசிய இளையோர் விளை யாட்டுப்போட்டிகள் பஹ்ரைனில் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய பெண்கள் கபடி அணியில் தமிழ்நாட்டின் சார்பில் கார்த்திகா இடம்பெற்றுள்ளார். - எஸ். உத்தண்ட ராஜ்