2027 ஒருநாள் உலகக்கோப்பையில் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. அதனை தொடர்ந்து 2027 ஒருநாள் உலகக்கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீரியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தரவரிசையில் அடிப்படையில் 10 அணிகள் நேரடியாகப் பங்குபெறும்.மேலும் உலக அளவிலான தகுதிச்சுற்றின் அடிப்படையில் மேலும் 4 அணிகள் ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்கும். 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.