ஆசிய சைக்கிள் பந்தயத்தின் ஸ்பிரின்ட் பிரிவில் இந்தியாவின் ரொனால்டோ சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தில்லியில் 41வது சீனியர், 28வது ஜூனியர் ஆசிய டிராக் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 10வது பாரா சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஸ்பிரின்ட் தனிநபர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரொனால்டோ சிங், கஜகஸ்தானின் ஆன்ட்ரி சுகே மோதினர். இதில் ரொனால்டோ (10.422, 10.899 வினாடி) வெற்றி பெற்றார்.
போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை ரொனால்டோ, ஜப்பானின் கென்டோ யமாசகியை சந்தித்தார். யமசாகி ரொனால்டோவை அடுத்தடுத்து தோற்கடித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதில் ரொனால்டோ(10.454, 10.433 வினாடி) தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். சாம்பியன்ஷிப்பில் இது அவரது மூன்றாவது பதக்கம்.
முன்னதாக 1 கி.மீ. டைம் ட்ரையல் மற்றும் டீம் ஸ்பிரிண்ட் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார். 200 மீட்டா் ஃப்ளையிங் தகுதிச்சுற்றின்போது 9.94 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனையுடன் அவா் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. கஜகஸ்தானின் ஆண்ட்ரே சுகே வெண்கலப் பதக்கம் பெற்றாா்.
இந்திய ஜூனியா் பிரிவில் 15 கிலோ மீட்டா் பாய்ன்ட்ஸ் ரேஸில் இந்தியாவின் பிா்ஜித் யும்நாம் 23 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றாா். தென் கொரியாவின் சங்யோன் லீ வெள்ளியும், உஸ்பெகிஸ்தானின் ஃபரூக் போபோஷெரோவ் தங்கமும் கைப்பற்றினா்.
10 கிலோ மீட்டர் மகளிா் ஸ்க்ராட்ச் பிரிவில் இந்தியாவின் சயானிகா கோகோய் 3 ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இப்போட்டியின் உலக கிளாஸ் பிரிவில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தமாக 23 பதக்கங்கள் வென்று 5 ஆம் இடம் பிடித்தது.
கொரியா 12 தங்கம், 14 வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், கஜகஸ்தான் 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலத்துடன் 3ஆவது இடத்தையும் பிடித்தன. ஜப்பான் 18 தங்கம், 7 வெள்ளி மற்றும் 2 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.