செஸ் உலகின் முக்கிய தொடரான உலக ஒலிம்பியாட் தொடரின் 44-வது சீசன் சென்னைக்கு அருகே மகாபலிபுரத்தில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொட ருக்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பிரேசில் அணியின் பயிற்சியாளராக மதுரையைச் சேர்ந்த பிரியதர்ஷன் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக பிரேசில் செஸ் அணிக்கு ஆன்லைனில் பயிற்சி அளித்து வரும் பிரியதர்ஷன் கண்ணப்பன், இந்தியாவின் 44-வது கிராண்ட்மாஸ்டர் ஆவார். சர்வதேச அளவில் 11 பதக்கங்களை வென்றுள்ள பிரியதர்ஷன் ஏற்கனவே 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் சப்-ஜூனியர் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.