games

img

நாளை தொடங்குகிறது மகளிர் டி-20 உலகக்கோப்பை

8-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா நாட்டில் வெள்ளியன்று (பிப்., 10-ஆம் தேதி) தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், அயர்லாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் பி பிரிவில் உள்ள இந்திய அணி இடம்பிடித்துள்ள நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.