games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா - 2023 (ஸ்பெஷல்)

கை நழுவிய உலகக் கோப்பை!

1.     10 ஆட்டங்களில் வென்றுவிட்டோம், தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றியுடன் இறுதிக்கு வந்துள்ளோம், லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை ஏற்கெனவே வீழ்த்தியுள்ளோம் என்று அசால்ட்டாக விளையாடியதே இந்திய அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் ஆகும்.
2.     பெரியளவு பிட்ச் ரிப்போர்ட் இல்லாத நரேந்திர மோடி மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று வெளிநாட்டு அணியான ஆஸ்திரேலியாவிற்கு தெரிந்தது கூட, இந்திய அணிக்கு புரியவில்லை. மந்தமான ஆடுகளங்கள் தொடக்கத்தில் வீரியமாகவும், பின்னர் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறும். இதனை முன்கூட்டியே கணித்த ஆஸ்திரேலியா டாஸ் வென்ற
வுடன் பந்துவீச்சை தேர்வு செய்தது.
3. ஆஸ்திரேலிய அணி சுழற்பந்துவீச்சில் திணறும் என்பதை முன்கூட்டியே உணராமல் தமிழ்நாடு வீரர் அஸ்வினை பெஞ்சில் அமர வைத்தது. ஜடேஜா, குலதீப் பந்துகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிக கடுமையாக திணறினார்கள். அஸ்வினையும் களமிறக்கினால் ஆஸ்திரேலியா சின்னாபின்னமாகி இருக்கும். அணி தேர்வில் சொதப்பிவிட்டார்கள்.
4.     ஆடுகளம் தொடக்கத்தில் பந்துவீச்சிற்கு சாதகமாக இருப்பது தெரிந்தும், பவுன்சர் பந்துகளை அதிரடியாக ஆட நினைத்து 150 ரன்னுக்குள் மிடில் ஆர்டரைஇழந்தது. 
5.     ஆஸ்திரேலிய அணியில் 9 பேர் வரை பேட்டிங் திறன் கொண்டவர்கள் என்பதை கூட அறியாமல் 5 பேர் கொண்ட பந்துவீச்சு அணியை இந்தியா களமிறக்கியது.
6. டிராவிஸ் ஹெட், லபுஸ்சாக்னே ஆகியோர் டெஸ்ட் ஆட்டங்களின் மந்தமான பேட்டிங் திறன் கொண்டவர்கள். அவர்களுக்கு எதிராக கடினமான வியூகம் அளிக்காமல் பெயரளவிற்கு பந்துவீச வைத்தார் இந்திய கேப்டன் ரோஹித்.
7.     ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் ஸ்மித், வார்னர், மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோருடன் அடிக்கடிஆலோசனை மேற்கொண்டார். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா, மூத்த வீரர்களான கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா என யாரிடமும் ஆலோசனை மேற்கொள்ளவில்லை. தனியாகவே அணியை வழி நடத்தியது.
8.     கம்மின்ஸ் போர்க் களத்தில் இருப்பது போல அடிக்கடி
வியூகம் அமைத்து இந்திய அணியை சுருள வைத்தார். முக்கியமாக டென்ஷன் இல்லாமல் அணியை திடமாக கட்டுக்கோப்பாக வழிநடத்தினார். ஆனால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டென்ஷனாகவே இருந்தார். இதனால் இந்திய அணியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
9.     வெற்றி இலக்கு குறைவாக நிர்ணயித்தது மிக சிக்கலான விஷயம் என்பதால், தொடக்க ஓவர்களில்சுழற்பந்துவீச்சை தேர்ந்தெடுக்காமல் வேகப்பந்து வீச்சை வீசியது மிகவும் மோசமான தவறு ஆகும். ஆஸ்திரேலியர்கள் வேகப்பந்துவீச்சின் காதலர்கள் என்பதை உணராமல் தொடர்ந்து வேகப்பந்துவீச்சை வீசியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
10.    இந்திய வீரர்கள் நன்றாக விளையாடினாலும் பதற்ற மேலாண்மையே இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் ஆகும். அரசியல் காரணம் மற்றும் பல்வேறு பதற்றங்களால் இந்திய அணி உலகக்கோப்பையை நழுவவிட்டது.

கம்மின்ஸுக்கு இருக்கும் பக்குவம் பிரதமர் மோடிக்கு இல்லை

உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸிடம் கொடுக்கும் நிகழ்வில்  இந்திய பிரதமர் மோடி, ஆஸ்தி ரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் மேடை ஏறினர். கோப்பையை கொடுக்கும் பொழுது மட்டும் லேசாக புன்னகைத்த பிரத மர் மோடி, கோப்பையை கொடுத்த வுடன் ரிச்சர்ட் மார்லஸை மேடையை  விட்டு கிளம்புங்கள் என்று சைகை  செய்தார். கிளம்பும் பொழுது உல கக்கோப்பையும், கம்மின்ஸையும் முறைத்து பார்ப்பது போல மோடி பார்த்தார். மோடியின் இந்த செயலை கம்மின்ஸ் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு, அதே புன்னகை யுடன் நீங்கள் இறங்கலாம் என்ற சொல் மொழியில் அவரை வழி யனுப்பி வைத்தார். 30க்கும் 73க்கும் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மி ன்ஸுக்கு வெறும் 30 வயது தான்  ஆகிறது. ஆனால் பிரதமர் மோடிக்கோ 73 வயது ஆகிறது. சாதா ரண கிரிக்கெட் அணியின் கேப்டன் கம்மின்ஸிற்கு இருக்கும் பக்குவம் ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்கும் மோடிக்கு இல்லை என்பதே வருத்தமான விஷயம்  ஆகும். உலகளவில் முக்கியமான உலகக்கோப்பை கிரிக்கெட் தொட ரின் இறுதி நிகழ்வில் பிரதமர் மோடி யின் இந்த மட்டமான நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

‘எனக்கு கேமரா தான் முக்கியம்’

கோப்பையை வாழ்த்து மொழியுடன் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸிடம் கொடுத்தார் பிரதமர் மோடி. பதிலுக்கு கம்மின்ஸ் நன்றி தெரிவித்து மோடியிடம் பேசினார். ஆனால் மோடி கம்மின்ஸ் பேச்சை கவனிக்கவில்லை. மாறாக தன்னை கிளிக் செய்யும் போட்டோ கிராப்பர்களை மட்டுமே உற்றுநோக்கினார். இதனை கண்ட கம்மின்ஸ் பேச்சை நிறுத்தி, தன்னுடைய துணை பிரதமரான ரிச்சர்ட் மார்லஸிடம் பேச ஆரம்பித்தார்.

யாரும் கை காட்டவில்லை...
மோடியை கண்டுகொள்ளாத ரசிகர்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறு திப்போட்டி பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.  இந்த ஆட்டத்தை நேரில் காண ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும் பொழுது பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் வருகை தந்தனர்.  அப்பொழுது போட்டியை நேரடி யாக ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  நிறுவனம் பிரதமர் மோடியை மைதான டிஜிட்டல் திரையில் காண் பித்தது. இதனை கண்டதும் மோடி, ரசிகர்களை வாழ்த்துவது போல கையை அசைத்தார். ஆனால் ரசி கர்கள் யாரும் பதிலுக்கு கையை  காட்டவில்லை. காரணம் அகமதா பாத் மைதானத்தில் குஜராத்தியர்கள் மட்டும் இல்லை. நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் சென்று இருந்த னர். இதனால் மோடியை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. முக்கிய மாக போட்டி போகும் போக்கில் மோடியை கண்டும் காணாமல் இருந்துவிட்டனர். யாரும் கையை காட்டவில்லை என்பதால் மோடி சத்த மில்லாமல் அமைதியாக இருந்தார். அவர் அமைதியாக இருந்த பின்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அவ ரை காட்டுவதை குறைத்துவிட்டது.