இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அவர் அந்த பொறுப்பை கவனிப்பார் எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த புதிய பொறுப்பை அடுத்த ஒரு ஆண்டுக்கு ஜெயவர்தனே கவனிப்பார். அதோடு இலங்கை அணியின் அனைத்து விதமான செயல்பாட்டையும் அவர் கவனிப்பார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் சி.இ.ஓ ஆஸ்லி டி சில்வா கூறியதாவது,,ஜெயவர்தனே தேசிய அணியில் ஏற்றுக் கொண்டுள்ள புதிய பொறுப்புக்காக நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எதிர்வரும் 2022-இல் இலங்கை அணி, அதிகளவில் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. அதற்கு ஜெயவர்த்தனே அணியின் பக்கம் இருப்பது உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இவர் இலங்கை அணிக்காக 149 டெஸ்ட், 448 ஒருநாள் மற்றும் 55 டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவரது பங்களிப்புடன் அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் பாதி ஆட்டத்தில் இலங்கை அணி சிறப்பாகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.