games

img

தொடர்ந்து ஏமாற்றப்பட்ட ரசிகர்கள்

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக் தனது  மிரட்டல் வேகப்பந்துவீச்சின் மூலம் குறு கிய காலத்தில் இந்திய அணியில் இடம்பி டித்து தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி-20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.  ஆனால் ஆடும் லெவனில் கள மிறக்கப்படாமல் முதல் 2 ஆட்டங்களி லும் பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள் ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உம்ரான்  மாலிக் முதல் சர்வதேச ஆட்டத்தை  காண ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் என்ன காரணமோ தெரிய வில்லை உம்ரானை ஆடும் லெவனில்  களமிறக்காமல் ஆவேஸ் கான், ஹர்ஷல் படேல் ஆகியோரை களமிறக்கினார் பயிற்சியாளர் ராகுல்  டிராவிட். உம்ரான் மாலிக்கை களமிறக்காத தால் தான் இந்திய அணி டி-20 தொட ரை இழந்தது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். சொல்லப்போனால் ரசிகர்கள் கூறியது ஒருவகையில் உண்மை தான். ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகியோரின் ஷார்ட்பிட்ச்  பந்துவீச்சை தென் ஆப்பிரிக்கா பேட்டர்கள் பதம் பார்த்து புரட்டியெடுத்துள்ளனர். வேகம் இல்லாத ஷார்ட் பிட்ச் பந்து வீச்சாளர்களை களமிறக்கி அடுத்த டுத்து தோல்வியை சந்திப்பதற்கு பதிலாக மிரட்டல் வேகத்துடன் கலக்கும் உம்ரான் மாலிக்கை கடைசி போட்டியிலாவது களமிறக்கி இந்திய கிரிக்கெட் அணி ஆறுதல் வெற்றி ருசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இது ஒட்டுமொத்த ரசிகர்களின் கனவாக உள்ளது.