games

img

விளையாட்டு...

கால்பந்து மைதானத்தில் “பொம்மை” மழை

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக  துருக்கி ரசிகர்களின் வித்தியாசமான செயல்

கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருநாடுகளிலும் ஏறக்குறைய மீட்பு பணி நிறைவு பெற்ற நிலையில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் காயங் களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், துருக்கியில் லேசான அளவில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. ஆனால் போர் பிராந்தியமான சிரியாவில் இயல்பு வாழ்க்கை தொடர்பாக உறுதியான செய்திகள் வெளி யாகாமல் உள்ளது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நன்கொடை திரட்டும் வகையில் துருக்கிய கால்பந்து லீக் தொடரில் விளையாடும் அணி களான பெசிக்டாஸ் - அண்டலியாஸ் அணிகளை மோத வைத்து கண்காட்சி போட்டி ஒன்று வோடபோன் பூங்கா  மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கி 4-வது (04:17 - உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு துருக்கியில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் நினைவாக) நிமிடத்தில் திடீரென ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. அப்பொழுது ரசிகர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மைதானத்தை நோக்கி பொம்மைகளை வீசினர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொம்மைகள் கால்பந்து மைதான பிட்சில் வந்து விழுந்தன. மேலும் கண்காட்சி போட்டிகளில் டிக்கெட் கட்டணத்திற்கு ஏற்ப அல்லாமல் நிவாரணத்திற்கு உதவும் வகையில் அதிக கட்டணம் கொடுத்து போட்டியை காண ரசிகர்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக குத்துச்சண்டை தொடர்: இந்தியாவுக்கு 3 வெள்ளி

பல்கேரியாவில் நடைபெற்று வரும் இருபாலர் உலக குத்துச்சண்டை தொடரில் ஆடவர் 48 பிரிவு மற்றும் மகளிர் 50, 81 கிலோ பிரிவுகளிலும் இந்திய நட்சத்திரங்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினர். ஆனால் இறுதிச்சுற்றில் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய வீரர் - வீராங்கனைகள் தங்கப்பதக்கத்தை நழுவவிட்டு வெள்ளியை வென்றனர்.  ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் சஹானி உஸ்பெகிஸ்தான் வீரரிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.  மகளிர் 50 கிலோ எடைப்பிரி வில் சீன வீராங்கனை ஹூ மெய்யிடம் இந்திய வீராங்கனை அனாமிகா தோல்வியைத் தழுவி வெள்ளி வென்றார். மகளிர் 81 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்க னை எம்மாவிடம் இந்திய வீராங்கனை அனுபமா தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

சாதனை

டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடம்

டென்னிஸ் உலகின் முன்னணி நட்சத்திர வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கடந்த மார்ச் 2021-ஆம் ஆண்டு 310 வாரங்களுக்கு நீடித்த பெடரரின் (சுவிஸ்) சாதனையை முறியடித்த நிலையில், தற்போது ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் 377 வாரங்களாக இருந்த ஸ்டெபி கிராபின் சாதனையையும் ஜோகோவிச் (378) முறியடித்துள்ளார். இதன்மூலம் ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் அதிக வாரங்கள் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த வீரர் என்கிற பெருமையை ஜோகோவிச் பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.