22-வது சீசன் உலகக் கோப்பை தொடர் வரும் 20-ஆம் தேதி கத்தார் நாட்டில் தொடங்குகிறது. இதற் கான ஏற்பாடுகள், டிக்கெட் விற்பனை இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், உலகக்கோப்பையில் பங்கேற்கும் நாடுகள் கத்தார் வருவது தான் பாக்கி. இந்நிலையில், “குரூப் டி” பிரிவில் கள மிறங்கும் துனிசியா நாட்டை உலகக்கோப்பையில் இருந்து எந்நேரம் வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) திடீரென எச்சரித்துள்ளது. பிபாவின் இந்த அறிவிப்பு போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் துனி சியா கால்பந்து ரசிகர்களிடையே கடும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணம்?
வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் கால்பந்து கூட்டமைப்பில் அரசாங்கத்தின் தலையீடு மிக அதிகமாக உள்ளதாகவும், இந்த தலையீடு உலகக் கோப்பையிலும் இருப்பது கண்டறியப்பட்டால் துனிசிய கால்பந்து கூட்டமைப்பிற்கு (TFF) சர்வதேச தடையும், உலகக்கோப்பையில் இருந்து வெளியேறும் நிலை உருவாகும் என பிபா எச்சரித்துள்ளது. துனிசியாவிற்கு இது 6-வது உலகக்கோப்பை தொடராகும். பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் ஆகிய அணிகளுடன் “குரூப் டி” பிரிவில் உள்ளது துனிசியா. நவம்பர் 22-ஆம் தேதி முதல் ஆட்டத்தில் துனிசியா - டென்மார்க்கை எதிர்கொள்கிறது. பொதுவாக விளையாட்டு உலகில் சர்வதேச ஊக்கமருந்து சம்மேளனத்துக்கு பிறகு மிக அதிரடியாக செயல்படும் விளையாட்டு அமைப்பு என்ற பெயரை பெற்றுள்ள பிபாவின் நடவடிக்கை அனைவருக்குமே தெரிந்தது தான். சமீபத்தில் இதே அரசாங்க தலையீடு பிரச்சனையால்தான் இந்திய கால்பந்து உலகை ஒரு புரட்டு புரட்டியெடுத்தது. இந்தியாவின் நிலையை ஆராய்ந்து பார்த்தால் துனிசியாவின் உலகக்கோப்பை தொடர் என்னவாகும் என்று சொல்ல முடியாது. உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில், துனிசியா உலகக்கோப்பையில் பங்கேற்குமா? இல்லை கத்தாரில் சுற்றுலா சென்று சுற்றி பார்க்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.