games

img

ரசிகர்கள் இல்லாமல் களையிழந்த புரோ கபடி தொடர்

அதிரடி, ஆக்ரோஷம் என  40 நிமிட ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பர பரப்பாக நடைபெறுவதால் குறுகிய காலத்தில் பிரபல மடைந்துள்ளது புரோ கபடி தொடர். கிரிக்கெட் விளையாட் டைப் போலவே கபடிக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி யுள்ளதால் விளையாட்டு உல கின் முதன்மையான உள்ளூர் தொடராக விரைவில் உருவெ டுக்கிறது. இந்த புரோ கபடி தொடரின் 8-வது சீசன் தற்போது பெங்க ளூருவில் நடைபெற்று வருகிறது. கொரோ னா பரவல் மிதமாக இருந்ததால் தொடக் கத்தில் ரசிகர்கள் அனுமதியுடன் முதல் 15 ஆட்டங்கள் நடைபெற்றது. அதன் பின் கர் நாடக அரசு ஒமைக்ரான் பரவல் அச்சத்தால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக புரோ கபடி தொடர் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டு ரசிகர்கள் நேரில் போட்டி யைக் காண அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எவ்வித ஆரவாரம் இல்லாமல் புரோ கபடி தொடர் களையிழந்து காணப்படுகிறது.

இன்றைய ஆட்டங்கள்

 குஜராத் - ஹரியானா 
(இரவு 7:30 மணி)

புனே  - பெங்களூரு
(இரவு 8:30 மணி)

இரண்டு ஆட்டங்களும் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடைபெறுகிறது