games

img

கோலாகலமாக தொடங்கியது பாரா ஒலிம்பிக் 2024

கோலாகலமாக தொடங்கியது பாரா ஒலிம்பிக் 2024

சுமித் அண்டில், பாக்கிய ஸ்ரீ தேசிய கொடியை ஏந்தினர்

17ஆவது சீசன் பாரா ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர்  பாரீஸில் இந்திய நேரப்படி புதனன்று நள்ளிரவு சிறப்பு கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியது. செப்டம்பர் 8 வரை நடைபெறும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரில் 169 நாடுளைச் சேர்ந்த 4,400  வீரர் - வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 22 விளையாட்டு பிரிவு களில் மொத்தம் 549 வகையான போட்டி கள் நடைபெற உள்ள நிலையில், இந்தியா சார்பில் இதுவரை இல்லாத வகையில் 84 வீரர்-வீராங்கனைகள் (52  வீரர்களும், 32 வீராங்கனைகளும்) பதக்க வேட்டை நிகழ்த்த பாரீஸில் பாரா ஒலிம்பிக் தொடரில் களமிறங்கி யுள்ளனர்.

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா பாரீஸ் நக ரத்தின் முக்கிய பகுதியான லா கான் கோர்டு என்ற இடத்தில் நடைபெற்றது. தொடக்க விழாவில் 140 நடன கலை ஞர்கள் பங்கேற்று கண்கவரும் நட னத்தில் ஈடுபட்ட நிலையில், பிரெஞ்ச் கலைஞர் கிறிஸ்டின் குழுவினர் நடத்திய இசை கச்சேரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதே போல போர் விமானங்கள் மூலம் வண்ண புகைகள் வெளியேற்றி வானத்தில் வட்டமிட்ட படி சென்றன.

இந்தத் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு  கடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சுமித் அண்டி லுக்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாக்கிய ஸ்ரீக்கும் கிடைத்தது. இந்திய குழுவினர் வெள்ளை நிற ஆடை மற்றும் தேசியக் கொடியை ஏந்தி சென்றனர். கடந்த முறை  ஐந்து தங்கம் உட்பட 19 பதக்கங் களை வென்று பதக்க பட்டியலில் 24ஆவது இடத்தை பிடித்த இந்தியா,  இம்முறை அதிக வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருப்பதால் டோக்கியோ சீசனை விட அதிக பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ஜாக்கி ஜான்

தொடக்க விழாவிற்கு முன்னதாக திரையுலகின் சீனாவைச் சேர்ந்த தற்காப்பு கலை நாயகனும், குங்பூ கலை வல்லுநருமான ஜாக்கி ஜான் பாரா ஒலிம்பிக் சுடரை பாரீஸ் நகரின் மையப் பகுதி வழியாக ஏந்திச் சென்றார். அவருக்கு பின்னால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வலம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.