திரிகோணமலை, ஜன. 6 - இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடை பெற்றுள்ளது. திரிகோணமலை சம்பூரில் சனிக் கிழமையன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டை இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர்செந்தில்தொண்டமான் மற்றும் மலேசியா எம்.பி. டத்தோ ஸ்ரீமுருகன் சரவணன் ஆகியோர் கொடி யசைத்து தொடங்கி வைத்தனர்.
முதலாவதாக சம்பூர் பத்ரகாளி யம்மன் கோயில் மாடு களத்தில் இறக்கிவிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து சீறிப்பாய்ந்து வந்த காளை களை வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளனர். 150 மாடுபிடி வீரர்களில் 50 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆவார்.
இவரது பூர்வீகம், தமிழகத்தின் சிவங்கை மாவட்டம் என்பதால், தமிழகத்தின் கலாச்சார பெருமையாக விளங்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை இலங்கையிலும் அறிமுகப்படுத்தும் விதமாக செந்தில் தொண்டமான் முயற்சியில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு உள்ளது.