காற்றில் ஏறி - அந்த
வானத்தை இடிப்போம்
கவிமழை கொட்டுக...
கடலில் தாவி - அந்த
அலைகளை கலக்குவோம்
நுரைத்துப் பொங்குக...
உறக்கம் கலைய - அந்த
உறுமியை இழுப்போம்
உணர்ச்சி பீறிடுக...
தயக்கம் உடைய - அந்த
துடிப்பறை முழக்குவோம்
காலங்கள் அதிர்க....
போரில் முழங்கும்- அந்த
முரசம் போல் அதிர்வோம்
எதிரிகள் நடுங்குக...
களத்தில் சுழலும் - அந்த
கைவாளாய் ஒளிர்வோம்
காலத்தை வெல்வோம்!
உண்மையின் தீச்சுடராய்
உழைப்பாளியின் தீக்குரலாய்
களமாடுவாய் நீ...தீக்கதிரே!
-சூர்யா, சென்னை.