facebook-round

img

இராணுவப் பள்ளிகள் (1): ஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்

ஆர்.எஸ்.எஸ் ஒரு இராணுவப் பள்ளியைத் தொடங்க உள்ளதாம். உத்தர பிரதேசத்தில் புலந்தர் சாகர் மாவட்டத்தில் அது அமையுமாம். முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராஜேந்திரசிங்கின் நினைவாக "ராஜு பய்யா சைனில் வித்யா மந்திர்" என்னும் பெயரில் அடுத்த ஆண்டு முதல் அப்பள்ளி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 12ம் வகுப்புகள் வரை அப்பள்ளியில் CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் இராணுவ அதிகாரிகள ஆவதற்கான பயிற்சியும் கல்வியும் அளிக்கப்படும் எனவும் அடுத்த மாதம் முதலே விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் எனவும் மேற்கு உ.பியின் "வித்யா மந்திர்" பொறுப்பாளர் அஜய் கோயல் சொல்லியுள்ளார். ஆறாம் வகுப்பில் 160 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இராணுவத் தியாகிகளின் பிள்ளைகளாக உள்ள56 பேர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும். ராஜுபையா பிறந்த ஊரானா ஷிகார்பூரில் அவரது பிறந்தநளன்றே பணி தொடங்கப்படும். ஆர்.எஸ்.எஸ்சின் "வித்யா பாரதி" எனும் இந்த அமைப்பு இந்தியா முழுவதும் 20,000 க்கும் மேற்பட்ட கல்விக்கூடங்களை நடத்துவது குறிப்பிடத் தக்கது.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளிடமிருந்து ஆலோசனைகள் பெறப்படும் எனக் கூறும் அஜய் கோயல், "நிறைய இராணுவ அதிகாரிகள் எங்களுடனும் எங்களது கிளை அமைப்புகளுடனும் தொடர்பில் உள்ளனர். அவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கான சந்திப்புத் தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும்" எனச் சொல்லிய அவர், இது போன்ற இராணுவப் பள்ளிகள் இன்னும் அதிகம் உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார். நமது நாட்டிற்கு நிறைய இராணுவ அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள் எனவும் தற்போது மாவட்டத்த்திற்கு ஒரு இராணுவப் பள்ளிதான் உண்டு என்பதால் இன்னும் அதிகப் பள்ளிகள் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

"மக்களை இராணுவமயப்படுத்துவது (militarisation) என்பது ஆர்.எஸ்/எஸ்சின் கொள்கைகளில் ஒன்று என்பது நினைவுகூறத் தக்கது.

இங்கொன்றைச் சொல்ல வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சின் வித்யா மந்திர் நடத்தும் பல்ளிகளில் இராணுவப் பள்ளிகள் இதுவரை ஏதுமில்லை. ஆனால் மகாராஷ்டிரத்தில் நாசிக்கில் "போன்சாலா இராணுவப் பள்ளி " என ஒரு இராணுவப் பள்ளி உண்டு. மலேகான் பயங்கரவாதத் தாக்குதலின்போது அதன் பெயர் பெரிய அளவில் அடிபட்டது. அந்தப் பள்ளியை 1937ல் உருவாக்கிய டாக்டர் மூஞ்சேதான் ஆர்.எஸ்.எஸ் உருவாவதற்கும் காரணமாக இருந்தவர். Central Hindu Military Education Society எனும் அமைப்பால் நடத்தப்பட்டுவரும் அந்தப் பள்ளி ஆர்.எஸ்.எஸின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாதபோதும் அதனுடன் நெருக்கமான தொடர்புடையதாகத்தான் இருந்து வருகிறது. ஆர்,எஸ்,எஸ் தலைவர்கள் அப்பள்ளி நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது தொடர்ந்து நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஆறுபேர்கள் கொலப்பட்டு ஏராளமானோர் படுகாயம் அடைந்த மலேகான் தொடர் குண்டு வெடிப்பு நடந்த போது 2008 செப் 16 அன்று சதிகாரர்கள் அங்குதான் கூடி சதித் திட்டம் தீட்டினர் என்கிற குற்றச்சாட்டு இங்கே நினைவுகூரத் தக்கது.

(தொடரும்)

-Marx Anthonisamy