படுகர் மக்கள் தற்போது
பழங்குடியினர் பட்டியலில்
இல்லை. தங்களை
பழங்குடியினர் பட்டியலில்
சேர்க்க வேண்டுமென
கோரிக்கையை தான்
முன்வைத்திருக்கிறார்கள்..
ஏற்கனவே வாஜ்பாய்
பிரதமராக இருந்த காலத்தில்
இந்த கோரிக்கையை
நீலகிரி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினராக
பாஜகவை சார்ந்த மாஸ்டர் மாதன்
முன்வைத்த போதே அதை
நிராகரித்தது அன்றைய
பாஜக ஒன்றிய அரசு..
இந்த உண்மையை மறைத்து
அக்கட்சியின் மாநிலத் தலைவர்
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமலேயே
"பழங்குடியின படுகர் மக்கள்"
என சொல்கிறார்..
அதைவிட வேடிக்கையாக
படுகர் மக்களுக்கு பதிலாக
இருளர் பழங்குடியினரின்
புகைப்படத்தை பயன்படுத்தி
ஊடகத்தின் வாயிலாக ஊதி
விடுகிறார் வெற்று வாக்குறுதியை..
சார்.. எப்பவுமே நீங்க இப்படித்தானா,
இல்ல இப்படித்தான் எப்போதுமா..?
ஷ்ஷ். யப்பா.. முடியலைய்யா..