facebook-round

img

ஒரு டீ சாப்டலாமா -ஆர்.பத்ரி

ஒரு டீ சாப்டலாமா..

சோர்வாக உணரும்வேளையிலோ

தொடர் பணிகள் இருந்தாலோ

சூடாக ஒரு கப் டீ

குடித்தால் உற்சாகம் வரும்..

உற்சாகம் வருமா..?

ஆம். உற்சாகம் வருமென

நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம்.

கடந்த மூன்று நூற்றாண்டுகளாக

மலைப்பகுதிகளின் பாரம்பரிய

விவசாயத்தை அழித்து

பணப்பயிரான தேயிலையை

உருவாக்கிய முதலாளிகள்,

அதை விற்பனை செய்யவே

"திடம், மணம், சுவை" எல்லாம்

கலந்திருப்பதாக விளம்பரம் செய்து

உற்சாகமூட்டுவதாக கதை சொல்லி

கல்லா கட்டுகிறார்கள்..

தேயிலை பயன்பாட்டுக்கு

வருவதற்கு முன்னாலும்

மனிதர்கள் உற்சாகமாக

இருந்திருப்பார்கள் தானே..?

அதேபோல்தான்,

இந்தியா முழுவதும் இப்போது

விற்பனையாகும் கேஎஃசி ( KFC )

கோழிக்கறிக்கு பின்னாலும்

ஒரு கதை இருக்கிறது..

அமெரிக்கர்கள் பொதுவாக

கோழியின் நெஞ்சுக்கறியை மட்டும்

சுவைத்து விட்டு அதன் கால்களை

குப்பையில் போடுவார்கள்..

தூக்கிப்போடும் கறிக்கும் கூட

காசு பார்ப்பதென்று எப்படியென

யோசித்த முதலாளிகள்

அவற்றை கண்டெய்னரில்

கொண்டு வந்து

"பக்கெட் சிக்கன்" என

இந்தியர்களின் வயிற்றில் தூக்கிப்போட்டு

துட்டு சேர்க்கிறார்கள்..

கார்ப்பரேட் கம்பெனிகள்

உற்பத்திக்காக செலவிடுவதை விட, நமது மனங்களை அவர்களுக்கேற்ற வகையில் தகவமைக்கும்

விளம்பரத்திற்கு கூடுதலாக

செலவிடுகிறார்கள்..

மூலதனத்தின் மூளைச்சலவையை

நுட்பமாக புரிந்து கொள்ளாமல்

அதற்கு எதிரான போரை

தொழிலாளி வர்க்கத்தால்

முன்னெடுக்க முடியாது..

-ஆர். பத்ரி