தீக்கதிரின்
விதையாய்
வேராய்
நீராய்
உரமாய்
விழுந்த தோழர்களே !
பூச்சி புழு அண்டாமல்
கொள்ளை போகாமல்
காவல் அரணாய் நின்ற
என்னரும் தோழ்ர்களே !
சைக்கிள் மிதித்து
உள்கிராமங்களுக்கும்
தீக்கதிரை தினம்
ஏந்திச் சென்ற தோழர்களே !
முகம் முகவரி புகழ் வெளிச்சம்
அங்கீகாரம் பாராட்டு
எதையும் எதிர்பாராமல்
உழைப்பை ஈந்து
கடைக்காலான தோழர்களே !
எல்லோரையும் நினைத்துப்
பார்க்கும் நேரம் இது
கட்டிடத்தின் ஆதாராம்
எப்போதும் கடைக்கால்தானே !
ஒரு துளி ரத்தமேனும்
ஒரு துளி வியர்வையேனும்
சிந்திய என்னரும் தோழர்களே !
ஒவ்வொருவருக்கும் என்
வணக்கங்கள் !
வாழ்த்துகள்
!
நன்றி !நன்றி! நன்றி!
சு.பொ.அகத்தியலிங்கம்.
29/6/2022.