facebook-round

img

தீக்கதிரின் விதையாய் வேராய் நீராய் உரமாய் விழுந்த தோழர்களே !

தீக்கதிரின்

விதையாய்

வேராய்

நீராய்

உரமாய்

விழுந்த தோழர்களே !

பூச்சி புழு அண்டாமல்

கொள்ளை போகாமல்

காவல் அரணாய் நின்ற

என்னரும் தோழ்ர்களே !

சைக்கிள் மிதித்து

உள்கிராமங்களுக்கும்

தீக்கதிரை தினம்

ஏந்திச் சென்ற தோழர்களே !

முகம் முகவரி புகழ் வெளிச்சம்

அங்கீகாரம் பாராட்டு

எதையும் எதிர்பாராமல்

உழைப்பை ஈந்து

கடைக்காலான தோழர்களே !

எல்லோரையும் நினைத்துப்

பார்க்கும் நேரம் இது

கட்டிடத்தின் ஆதாராம்

எப்போதும் கடைக்கால்தானே !

ஒரு துளி ரத்தமேனும்

ஒரு துளி வியர்வையேனும்

சிந்திய என்னரும் தோழர்களே !

ஒவ்வொருவருக்கும் என்

வணக்கங்கள் !

வாழ்த்துகள்

!

நன்றி !நன்றி! நன்றி!

சு.பொ.அகத்தியலிங்கம்.

29/6/2022.

;